Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வல்லப்பட்டை மரத்தை வெட்டி விற்பனை செய்ய முயன்ற நபர் கைது

December 16, 2019
in News, Politics, World
0

நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்ஷபான பத்தனஹேன பகுதியில் சட்டவிரோதமான முறையில் வல்லப்பட்டை மரத்தை வெட்டி அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி விற்பனை செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று மாலை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடம் இருந்து பல இலட்சம் பெறுமதியான 15.5 கிலோ வல்லப்பட்டை கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்த சந்தேக நபரை பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளதாகவும், எதிர்வரும் புதன்கிழமை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த காட்டு பகுதியில் இந்த வல்லப்பட்டை மரங்கள் அதிகமாக காணப்படுவதால் இதை சட்டவிரோதமாக வெட்டி விற்பனை செய்பவர்கள் அதிகமானோர் இப்பகுதியில் வாழ்கின்றார்கள்.

உலகில் மிக அதிக விலை கொண்ட வாசனை திரவியங்களை தயாரிப்பதற்காக இந்த வல்லப்பட்டை மரங்களை உபயோகிப்பதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

Previous Post

பொதுத் தேர்தல் சின்னம் குறித்து அமைச்சர் பிரசன்ன உறுதியான கருத்து

Next Post

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தது போல பொதுத் தேர்தலிலும் வாக்களியுங்கள்

Next Post

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தது போல பொதுத் தேர்தலிலும் வாக்களியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures