Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தது போல பொதுத் தேர்தலிலும் வாக்களியுங்கள்

December 16, 2019
in News, Politics, World
0

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் நாம் புதிய ஜனநாயக முன்னனி சார்பில் போட்டியிடுவோம். எமது மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் ஒற்றுமையாக இருந்து வாக்களித்தது போல, பாராளுமன்றத் தேர்தலிலும் தமது ஒற்றுமையையும் கட்டுப்பாட்டையும் எடுத்துக் காட்ட வேண்டும். இதில் தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வாக்களித்து உதவ வேண்டும். நாம் வெற்றி பெற்று அமைச்சர்களாகி மக்களுக்கான சேவைகளை தொடர்ந்து முன்னெடுப்போம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பி. திகாம்பரம் தெரிவித்தார்.

லிந்துல லசிக்க கலாசார மண்டபத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மக்கள் சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்ற போது உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சங்கத்தின் உப தலைவரும் அக்கரபத்தனை பிரதேச சபை உறுப்பினருமான வீ. சிவானந்தன் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான சங்கத்தின் உபதலைவர் எம்.ராம், பிரதி நிதிச் செயலாளர் சோ. ஸ்ரீதரன், தேசிய அமைப்பாளர் ஜி. நகுலேஸ்வரன், இளைஞர் அணித் தலைவர் பா. சிவநேசன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

நான் அமைச்சராக இருந்த காலப் பகுதியில் மலையக மக்களுக்கு என்னால் முடிந்தளவு உண்மையான சேவைகளை பெற்றுக் கொடுத்துள்ளேன். இதுவரை யாரும் செய்யாத வேலைத் திட்டங்களை செய்து காட்டியும் உள்ளேன். இனிமேல் எமது மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு எவரும் அரசியல் ரீதியில் சேவை செய்யாமல் காலத்தைக் கழித்து மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் தெளிவாகவும் விழிப்பாகவும் இருக்கின்றார்கள்.

எனது பதவிக் காலத்தில் ஏழு பேர்ச் காணி, தனி வீட்டுத் திட்டம், அவற்றுக்கான காணி உறுதிப் பத்திரங்கள், பிரதேச சபைகள் அதிகரிப்பு, பிரதேச செயலகங்கள் அதிகரிப்பு போன்ற அடிப்படை தேவைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளேன்.

அதேபோல், மலையக அபிவிருத்திக்கான அரசாங்கத்துக்கு பொறுப்பு கூற வேண்டிய நிறுவனமான “அதிகார சபையை” பெற்றுக் கொடுத்துள்ளேன். அது வெறுமனே பெயர்ப் பலகையில் இருப்பதாக மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். எமது காலத்தில் பெற்றுக் கொடுக்கப்பட்ட பிரதேச சபைகளை அனுபவிப்பது போல, ஏனைய விடையங்களையும் அனுபவிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது. அதை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்ல விடயங்கள் நடக்கும் போது எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம், வரவேற்போம், பாராட்டுவோம். மக்களுக்கு அநீதி நடக்கும் என்றால் அதைப் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்.

நாம் ஆட்சியில் இருந்த போது, இந்திய அரசாங்கத்தின் 4000 வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்துள்ளோம். இதற்கான பெயர்ப்பட்டியல் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு இந்திய தூதரகத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது. அதில் நாம் மாற்றங்கள் எதனையும் செய்யவில்லை. அந்தப் பட்டியல் அடிப்படையிலேயே பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் வீடுகளை வழங்க எம்மால் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட்டு இந்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதில் யாரும் மாற்றத்தைச் செய்ய முடியாது. கை வைக்கவும் முடியாது. அதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி வழங்காது. எனவே, நாம் திட்டமிட்டிருந்தபடி சம்பந்தப்பட்டவர்களுக்கு நிச்சயம் வீடுகள் கிடைக்க வேண்டும். இதில் எமது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

ஜனாதிபதித் தேர்தலில் நாம் ஆதரவு வழங்கிய சஜித் பிரேமதாஸ தோல்வி கண்டிருந்தாலும் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி தோல்வி காணவில்லை. எமது மக்கள் ஒற்றுமையாக இருந்து புதிய ஜனநாயக முன்னணிக்கு பெரும்பான்மை வாக்குகளை அளித்திருந்தார்கள். நாடளாவிய ரீதியில் 55 இலட்சம் வாகுகளைப் பெற்றிருந்த சஜித் பிரேமதாஸ மீது மக்களுக்கு அனுதாபம் ஏற்பட்டுள்ளது.அவரின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் நாம் புதிய ஜனநாயக முன்னனி சார்பில் போட்டியிடுவோம். எமது மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் ஒற்றுமையாக இருந்து வாக்களித்தது போல, பாராளுமன்றத் தேர்தலிலும் தமது ஒற்றுமையையும் கட்டுப்பாட்டையும் எடுத்துக் காட்ட வேண்டும். இதில் தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வாக்களித்து உதவ வேண்டும். நாம் வெற்றி பெற்று அமைச்சர்களாகி மக்களுக்கான சேவைகளை தொடர்ந்து முன்னெடுப்போம் என்றார்.

Previous Post

வல்லப்பட்டை மரத்தை வெட்டி விற்பனை செய்ய முயன்ற நபர் கைது

Next Post

யேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம்

Next Post

யேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழு கூட்டம்

July 10, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் | சுனில் ஹந்துனெத்தி 

July 10, 2026
பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

July 9, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

July 9, 2026

Recent News

நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழு கூட்டம்

July 10, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் | சுனில் ஹந்துனெத்தி 

July 10, 2026
பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

July 9, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

July 9, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures