வட கொரியாவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 32 சீனப் பிரிஜைகளும், நான்கு வட கொரியப் பிரஜைகளும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளைச் ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று வாங்ஹே (Hwanghae) மாகாணத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த மேலும் இரண்டு சீனப்பிரஜைகள் சிகிச்சைப்பெற்று வருவதாக சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
விபத்து நேர்ந்த பகுதிக்கு சீன அதிகாரிகள் மற்றும் வைத்தியர்கள் குழு, மருத்துவ பொருட்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஸ்ஸில் பயணித்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.