நாடாளுமன்றத்திற்கு இன்றைய தினம் விஜயம் செய்த நிலையில் விசேட உரையொன்றையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றினார்.
இதன்போது அவர் கூறுகையில், வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளார்.
அத்துடன், காணாமல் போனவர்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்படும். அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை ஊடாகவே தீர்வு காண முடியும்.
மேலும், கடந்த காலங்களில் சில அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எதிர்காலத்திலும் விசாரணைகளின் ஊடாக நிரபராதிகளாக அடையாளம் காணப்படுவோரை விடுதலை செய்ய எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.