Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கு கிழக்கு சிங்களமயமாக்கலுக்கு எதிராக கத்தோலிக்க திருச்சபை போராட்டம்

November 13, 2021
in News, Sri Lanka News
0
வடக்கு கிழக்கு சிங்களமயமாக்கலுக்கு எதிராக கத்தோலிக்க திருச்சபை போராட்டம்

சிங்களவர்களை மீள்குடியேற்றுவதன் மூலம் வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையான தமிழர்களை நீர்த்துப்போகச் செய்ய ராஜபக்ச அரசு முயற்சிப்பதாக கத்தோலிக்க திருச்சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

திருகோணமலை, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் சிங்கள மக்களை வரவழைத்து மக்கள் தொகையை திட்டமிட்டு மாற்றியமைப்பதாக ஸ்ரீலங்காவிற்கான இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் பெர்க்லருடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கத்தோலிக்க திருச்சபையின் ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கு சிங்களமயமாக்கல் தொடர்பில் தமிழ் அமைப்புக்களும் அரசியல்வாதிகளும் தொடர்ச்சியாக எச்சரித்துள்ள போதிலும் கத்தோலிக்க மதகுருமார்கள் சர்வதேச பிரதிநிதி ஒருவருடன் பேசும் அரிய சந்தர்ப்பமாக இது பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில் வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலைமை, மக்களின் வாழ்க்கை மற்றும் அப்பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக உள்ளூர் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னாரைச் சேர்ந்த பிடெலிஸ் பெர்னாண்டோ, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜஸ்டின் ஞானப்பிரகாசம், திருகோணமலை நோயல் இம்மானுவேல், மட்டக்களப்பு ஆயர் ஜோசப் பொன்னையா ஆகியோர் பலவந்தமாக காணிகளை ஆக்கிரமித்து சிங்களவர்களைக் குடியேற்றுவதால் தமிழ் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 ராஜபக்ச அரசாங்கம் வடக்கு, கிழக்கு அபிவிருத்திப் பணிகளை கைவிட்டுள்ளதாகவும், இரு பகுதிகளிலும் இந்திய அரசு மேற்கொள்ளும் பணிகளுக்கும் இடையூறு விளைவிப்பதாகவும் அவர்கள் சுவிட்ஸர்லாந்து தூதுவரிடம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் நேற்று நாடாளுமன்றத்தில், “யாழ்ப்பாணத்தில் 14,000 பேரும் கிளிநொச்சியில் 4,000 பேரும் காணியற்றவர்களாக இருக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.

“அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் இன்னும் தமிழர்களுக்கு மீளக் வழங்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் சிங்கள மக்களைக் கொண்டு வந்து காணிகளை பகிர்ந்தளித்து இனத்தை அழிக்க முயற்சிக்கின்றனர்” என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Next Post

இரு பெரும் பொருளாதார நாட்டு தலைவர்களுக்கு இடையில் திங்கள் சந்திப்பு

Next Post
இரு பெரும் பொருளாதார நாட்டு தலைவர்களுக்கு இடையில் திங்கள் சந்திப்பு

இரு பெரும் பொருளாதார நாட்டு தலைவர்களுக்கு இடையில் திங்கள் சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

July 4, 2026
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

July 4, 2026
எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026

Recent News

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

July 4, 2026
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

July 4, 2026
எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures