Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கில் சிறைச்சாலைகள் ‘கலாசாலையாக’ மாறியுள்ளது – கடற்தொழில் அமைச்சர் பெருமிதம்

August 6, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

தென்னிலங்கை சிறைச்சாலைகளைப் போலன்றி, வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலைகள் மிகவும் சுமூகமாகவும் பாதுகாப்பாகவும் இயங்குவதாகவும், இந்த சிறைச்சாலைகள் தற்போது ஒரு ‘கலாசாலையாக’ மாற்றப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலைகளின் தற்போதைய நிலைமைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், கடற்றொழில்,அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.

கலந்துரையாடலில், அமைச்சர் இ.சந்திரசேகர் குறிப்பிடுகையில், 

தென்னிலங்கை சிறைச்சாலைகளைப் போலன்றி, வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலைகள் மிகவும் சுமூகமாகவும் பாதுகாப்பாகவும் இயங்குவதாகச் சிறைச்சாலை அதிகாரிகள் உறுதிமொழி அளித்துள்ளனர். 

இச்சிறைச்சாலைகளில் சிறிதளவு நெரிசலான நிலை காணப்பட்டாலும், அதனைத் தவிர்ப்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஏனைய சிறைச்சாலைகளைப் போலல்லாது, இங்கு கைதிகளுக்குத் தொழிற்கல்வி, கல்வித் தொடர்ச்சி, நூலக வசதிகள் மற்றும் கணினிப் பயிற்சி போன்ற பல்வேறு ஆக்கபூர்வமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், இச்சிறைச்சாலைகள் தற்போது ஒரு ‘கலாசாலையாக’ மாற்றப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

நாட்டில் தற்போது சிறைச்சாலைகளில் ஏற்படும் கலவரங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதால், எமது மாகாணத்திலும் எத்தகைய எதிர்பாராத சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் வகையிலும், கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் விசேட பாதுகாப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டு முன்மொழியப்பட்டுள்ளன.

சிறைச்சாலைகளில் நிலவும் பல்வேறு குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, பாதுகாப்பு அதிகாரிகள் தயாரித்து வழங்கிய மேலதிக அறிக்கை நீதி அமைச்சரிடம் அனுப்பி வைத்துத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது, என தெரிவித்தார்.

இந்த அவசர கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், பிரதிப் பொலிஸ்மா அதிபர், 512ஆவது கட்டளைத் தளபதி, யாழ். மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், யாழ்ப்பாணம் பிரதேச செயலர், சிறைச்சாலை அத்தியட்சகர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Previous Post

பாடசாலைகளின் மூன்றாம் தவணை முதல் கட்டம் நாளையுடன் நிறைவு

Next Post

ஆகஸ்ட் மாதத்துக்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்போவதில்லை

Next Post
மே மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

ஆகஸ்ட் மாதத்துக்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்போவதில்லை

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கண்டி றோயல்ஸை வெளியேற்றி இரண்டாவது தகுதிகாண் போட்டியில் விளையாட கலம்போ கெப்ஸ் தகுதிபெற்றது

கண்டி றோயல்ஸை வெளியேற்றி இரண்டாவது தகுதிகாண் போட்டியில் விளையாட கலம்போ கெப்ஸ் தகுதிபெற்றது

August 6, 2026
மே மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

ஆகஸ்ட் மாதத்துக்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்போவதில்லை

August 6, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

வடக்கில் சிறைச்சாலைகள் ‘கலாசாலையாக’ மாறியுள்ளது – கடற்தொழில் அமைச்சர் பெருமிதம்

August 6, 2026
தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை : வெளியான அறிவிப்பு

பாடசாலைகளின் மூன்றாம் தவணை முதல் கட்டம் நாளையுடன் நிறைவு

August 6, 2026

Recent News

கண்டி றோயல்ஸை வெளியேற்றி இரண்டாவது தகுதிகாண் போட்டியில் விளையாட கலம்போ கெப்ஸ் தகுதிபெற்றது

கண்டி றோயல்ஸை வெளியேற்றி இரண்டாவது தகுதிகாண் போட்டியில் விளையாட கலம்போ கெப்ஸ் தகுதிபெற்றது

August 6, 2026
மே மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

ஆகஸ்ட் மாதத்துக்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்போவதில்லை

August 6, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

வடக்கில் சிறைச்சாலைகள் ‘கலாசாலையாக’ மாறியுள்ளது – கடற்தொழில் அமைச்சர் பெருமிதம்

August 6, 2026
தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை : வெளியான அறிவிப்பு

பாடசாலைகளின் மூன்றாம் தவணை முதல் கட்டம் நாளையுடன் நிறைவு

August 6, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures