Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

லண்டன் தீவிபத்து: சடலத்தின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த நபர் கைது

June 15, 2017
in News
0

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் 27 மாடிகளை கொண்ட Grenfell Tower என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த தீ விபத்தில் தற்போது வரை 6-பேர் பலியாகியிருப்பதாகவும். 70-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த பலர் காணாமல் போயிருப்பதாகவும், அவர்களை தீயணைப்பு படையினர் தேடிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தீவிபத்தில் இறந்துபோன நபரின் உடலை பாலிதீன் பையில் வைத்து அதனை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட குற்றத்திற்காக நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தீவிபத்தில் இறந்து தப்பித்துக்கொள்வதற்காக கட்டிடத்தின் மேலிருந்து கீழே குதித்த போது அந்த நபர் உயிரிழந்துள்ளார், இதனால் அவரது உடல் அந்த இடத்திலேயே பாலிதீன் பையில் போட்டு வைக்கப்பட்டிருந்தது.

இதனை நபர் ஒருவர் புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். வெடிகுண்டு சம்பவங்கள், தீவிபத்து சம்பவங்களின் போது இறந்துபோனவர்களின் சடலம் தொடர்பான புகைப்படங்கள் மக்களின் மனதில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், பொலிசார் சடலங்களின் புகைப்படங்களை எளிதில் வெளியிடமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியிருக்கையில், இந்த நபரின் செயல் தண்டனைக்குரியது என்பதால், இவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த குற்றத்திற்காக இந்த நபருக்கு குறைந்தபட்சம் 6 மாதம் சிறைதண்டனை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

advertisement
Previous Post

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: தீவிர சிகிச்சையில் நாடாளுமன்ற உறுப்பினர்

Next Post

இலங்கையர்களுக்கு சிறைத் தண்டனை விதித்த லண்டன் நீதிமன்றம்

Next Post

இலங்கையர்களுக்கு சிறைத் தண்டனை விதித்த லண்டன் நீதிமன்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures