Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லண்டன் சூப்பர்மார்க்கெட்டில் துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்த மர்ம நபர்கள்: ஏதற்காக? திகிலுட்டும் காட்சி

December 31, 2016
in News
0
லண்டன் சூப்பர்மார்க்கெட்டில் துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்த மர்ம நபர்கள்: ஏதற்காக? திகிலுட்டும் காட்சி

லண்டன் சூப்பர்மார்க்கெட்டில் துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்த மர்ம நபர்கள்: ஏதற்காக? திகிலுட்டும் காட்சி

பிரித்தானியாவில் கொள்ளையர்கள் இருவர் துப்பாக்கி மற்றும் கத்தியுடன் சூப்பர்மார்க்கெட் ஒன்றில் நுழைந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன், Eltham பகுதியில் உள்ள Co-op என்னும் சூப்பர்மார்க்கெட்டிலே இக்கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. குற்றவாளிகளை அடையாளம் காண சூப்பர்மார்க்கெட்டின் சிசிடிவியில் பதிவான காட்சியை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

குறித்த வீடியோவில், முகமூடி மற்றும் கருப்பு உடை அணிந்து துப்பாக்கி மற்றும் கத்தியுடன் இரண்டு பேர் கடைக்குள் நுழைகின்றனர்.

கத்தி வைத்திருக்கும் நபர் கடையின் பணம் செலுத்தும் இடத்திற்குள் நுழைந்து பெண் ஊழியரை மிரட்டி அங்கிருந்த சிகரெட் பெட்டிகளை எடுத்து ஒரு பையில் போடுகிறார். துப்பாக்கியுடன் இருக்கும் நபர் ஆண் ஊழியரை மிரட்டி பணம் அனைத்தையும் கொள்ளை அடிக்கிறார்.

கடையில் பணம் மற்றும் சிகரெட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதை பொலிசார் உறுதி செய்துள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு 18 முதல் 20 வயது இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

கொள்ளையடித்த பின் இருவரும் கடையின் வாசலில் தயாராக காத்துக்கொண்டிருந்த காரில் ஏறி தப்பிச்சென்றுள்ளனர்.

குறித்த கொள்ளையில் கார் ஓட்டுநரும் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக இதில் ஊழியர்கள் யாருக்கும் எந்த காயமும் எற்படவில்லை.

தற்போது, வீடியோ வெளியிட்டுள்ள பொலிசார் கொள்ளையர்கள் குறித்த தகவல் ஏதேனும் அறிந்தால் உடனே தொடர்பு கொள்ளும் படி அறிவித்துள்ளனர்.

Tags: Featured
Previous Post

மோடியின் அழைப்பை புறக்கணித்த மஹிந்த!

Next Post

பெர்லின் பாணியில் உக்ரைனில் லொறி தாக்குதல்: தாய், குழந்தையின் தலை துண்டித்த கொடூரன்

Next Post
பெர்லின் பாணியில் உக்ரைனில் லொறி தாக்குதல்: தாய், குழந்தையின் தலை துண்டித்த கொடூரன்

பெர்லின் பாணியில் உக்ரைனில் லொறி தாக்குதல்: தாய், குழந்தையின் தலை துண்டித்த கொடூரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures