Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

லண்டனில் தீவிரவாதிகள் முதலில் இதைத் தான் பயன்படுத்தியிருப்பார்கள்! பொலிசார் தகவல்

June 11, 2017
in News
0

பிரித்தானியா தலைநகர் லண்டனின் மையப் பகுதில் உள்ள பாலத்தில் தீவிரவாதிகள் வேனை வைத்தும், கையில் கத்தி மற்றும் கூர்மையான ஆயுதங்கள் கொண்டும் தாக்குதல் நடத்தினர்.

இதில் 22-பேர் பலியாகியுள்ளனர். 48-க்கும் மேற்பட்டோர் தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதல் நடத்திய மூன்று தீவிரவாதிகளையும் பொலிசார் சம்பவ இடத்திலே சுட்டு கொலை செய்தனர். மூன்று தீவிரவாதிகளின் பெயர்கள் மற்றும் விவரங்களை பொலிசார் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தனர். அவர்களின் பெயர்கள் Butt( 27), Rachid Redouane (30), Youssef Zaghba(22) ஆகும்.

இந்நிலையில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தீவிரவாதிகள் என்ன சதித் தீட்டம் தீட்டியிருந்தனர் என்பது குறித்த தகவலை ஸ்காட்லாந்து யார்டு பொலிசாரான Dean Haydon கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் வாடகைக்கு லாரி ஒன்றை ஆன்லைனில் புக் செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆனால் கட்டணம் செலுத்துவதற்கு பல முறை முயன்றுள்ளனர். அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.

வாடகைக்கு புக் செய்த லாரியின் எடை சுமார் 7.5 டன் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதன் பின்னரே அவர்கள் வாடகைக்கு மற்றொரு வாகனமான Renault வேனை எடுத்துள்ளனர். அவர்கள் மட்டும் லாரியை வாடகைக்கு எடுத்திருந்தால், பாதிப்பு அதிகமாகியிருக்கும் என்றும் அவர்கள் இந்த தாக்குதலில் ஈடுபடுவதற்கு பிரான்சில் நடந்த நைஸ் தாக்குதலும் ஒரு காரணம் என தெரிவித்துள்ளனர்.

பிரான்சில் நடந்த அந்த தாக்குதலின் போது தீவிரவாதிகள் லாரியை பயன்படுத்தினர்.

இதில் 86-பேர் பலியாகினர். அதையே இவர்கள் தூண்டுதலாக வைத்துக் கொண்டு லண்டன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Tags: Featured
Previous Post

வெற்றி நிச்சயம்: பன்னீர் செல்வம்

Next Post

அடுத்த தாக்குதல் சவுதி அரேபியா மீது தான்: அதிர்ச்சி வீடியோவை வெளியிட்ட ஐஎஸ்

Next Post

அடுத்த தாக்குதல் சவுதி அரேபியா மீது தான்: அதிர்ச்சி வீடியோவை வெளியிட்ட ஐஎஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures