Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரிஷாட், ஹிஸ்புல்லா, மொஹமட் ஏன் கைதாகவில்லை – ஞானசார தேரர்

February 13, 2020
in News, Politics, World
0
ஸ்ரீலங்காவின் பெரும்பான்மையினமான சிங்கள பௌத்த மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலின் ஊடாக தனிச் சிங்கள அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிங்கள பௌத்த பேரினவாத அமைப்பான பொதுபல சேனா வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தனிச் சிங்கள தலைவரை வெற்றிபெறச் செய்து ஆட்சிபீடம் ஏற்றியதைப் போன்று பொதுத் தேர்தலிலும் சிங்கள பௌத்த மக்கள் சரியான முடிவை தைரியமாக எடுக்க வேண்டும் என்று பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
பொதுபல சேனா அமைப்பின் கொழும்பிலுள்ள தலைமை காரியாலயத்தில் நேற்றைய தினம் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இது தொடர்பில் ஞானசாரா தேரர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
எம்.எஸ்.எச் மொஹமட் என்கிற நபர் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்காக 100 கோடி ரூபா நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். நிதியை வைத்தியசாலைக்கு வழங்குவதாகக் கூறியிருந்தாலும் அவ்வாறு வழங்கப்படவில்லை. இதுகுறித்து மருத்துவமனையின் பணிப்பாளருக்குத் தெரியாது. பணிப்பாளருக்கும் அச்சுறுத்தல் வழங்கியிருப்பதோடு பணிப்பாளரின் அறையை குண்டு வைத்து தகர்ப்பதாகவும் எச்சரித்திருக்கிறார்.
இவ்வாறு பெறப்பட்ட நிதி எங்கே சென்றது? யார் இதற்குப் பின்னால் இருக்கின்றார்கள்? பணம் காட்டிலா பதுக்கப்பட்டுள்ளது? குறித்த முஸ்லிம் நபர் குண்டு வைத்து தகர்ப்பதாக எச்சரித்தமை குறித்து முறைப்பாடு இருந்தும் விசாரணை எங்கே? கஜீதா என்கிற பதிவு செய்யப்படாத அமைப்பின் ஊடாக நிதி சேகரிப்பு நடத்தப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட மறுதினமே அவருடைய வங்கிக் கணக்கிற்கு 20 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 23ஆம் திகதி மேலும் இரண்டு மில்லியன் பெறப்பட்டுள்ளது. ஆகவே இந்த மொஹமட்டை கைது செய்தால் அவருக்கு யார் பாதுகாப்பு அளிப்பது? அரசியல் அரண் யார் கொடுப்பது என்பது அம்பலமாகிவிடும். இதேபோலவே ரிஷாட் பதியூதீன் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் அவர்களைக் கைது செய்யாமல் அரசாங்கம் கொஞ்சி விளையாடுகிறது.
ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம் குறித்தும் அம்பலமாகிய நிலையில் இன்னும் அது பறிக்கப்படவில்லை. வில்பத்து சரணாலயம் குறித்து முறையிட்டோம். ரிஷாட் வசமுள்ள 3000 ஏக்கர் காணி குறித்தும் ஆவணங்களை வெளியிட்டோம். ஆனால் ஒரு விசாரணையும் இல்லை.
ஆகவே இவர் குறித்த விசாரணைக்கு ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறு கோருகின்றேன் எனவும் அவர் அந்த ஊடக சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.
Previous Post

அமைச்சர்களுக்கு முன் துணிகரம் – சிங்கள சகோதரிக்கு குவியும் பாராட்டு

Next Post

சுரங்க ரயிலில் கொரோனா வைரஸ் திராவகம் கொட்டப்பட்ட சம்பவம் !

Next Post

சுரங்க ரயிலில் கொரோனா வைரஸ் திராவகம் கொட்டப்பட்ட சம்பவம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரலாறு படைத்தது வெஸ்லி கல்லூரி

35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரலாறு படைத்தது வெஸ்லி கல்லூரி

July 6, 2026
பழ.நெடுமாறனை சந்தித்தனர் தமிழ் தேசிய பேரவையினர் 

பழ.நெடுமாறனை சந்தித்தனர் தமிழ் தேசிய பேரவையினர் 

July 6, 2026
முழு உலகுக்கும் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்கள் எமக்குப் பிள்ளைகளே!

முழு உலகுக்கும் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்கள் எமக்குப் பிள்ளைகளே!

July 6, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார விஜயம்

July 6, 2026

Recent News

35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரலாறு படைத்தது வெஸ்லி கல்லூரி

35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரலாறு படைத்தது வெஸ்லி கல்லூரி

July 6, 2026
பழ.நெடுமாறனை சந்தித்தனர் தமிழ் தேசிய பேரவையினர் 

பழ.நெடுமாறனை சந்தித்தனர் தமிழ் தேசிய பேரவையினர் 

July 6, 2026
முழு உலகுக்கும் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்கள் எமக்குப் பிள்ளைகளே!

முழு உலகுக்கும் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்கள் எமக்குப் பிள்ளைகளே!

July 6, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார விஜயம்

July 6, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures