Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஏற்பட்ட விளைவை மறக்கவேண்டாம் | சஜித்

November 24, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சீர்குலையும் சமூக ஒழுங்கு

மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் செயற்பட்டதன் காரணமாகவே கடந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசாங்கம் வீட்டுக்கு செல்லவேண்டி ஏற்பட்டது.

அதனால் தேர்தல் நடத்துவதில்லை என மக்களின் கோரிக்கைகளை நிராகத்தால் அந்த நிலைமையே ஏற்படும் என்பதை ஜனாதிபதி மறந்துவிடக்கூடாது என எதிர்க்கட்சித் தலைரவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தேர்தல் நடத்துவதில்லை என ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வந்து தெரிவித்த விடயம் தொடர்பில் நாங்கள் ஆச்சரியப்படத் தேவையில்லை.

ஏனெனில் அவர் தேசிய பட்டியலிலே பாராளுமன்றத்து வந்தார், பின்னர் கோத்தாபய ராஜபக்ஷ்வினால் பிரதமராக நியமிக்கப்பட்டு, பாராளுமன்ற பெரும்பான்மை மூலம் ஜனாதிபதியாக தெரிவாகினார்.

அதனால் இந்த நாட்டின் சர்வஜன வாக்கு பலத்தின் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை. அதேநேரம் ஜனாதிபதி தேர்தலில் 69 இலட்சம் வாக்குகளை பெற்ற ஜனாதிபதி, பின்னர் பொதுத் தேர்தலில் 68 இலட்சம் வாக்குகளை பெற்று பிரதமர், அரசியலில் பிரபலமாகி நாட்டின் நிதி அமைச்சராகிய அந்த மூன்று பேரும் தேர்தலில் தோல்வியடைந்து வீட்டுக்கு செல்லவில்லை. மக்களின் பலத்தினாலே விட்டுச்சென்றார்கள்.

அதனால் மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காத காரணத்தினாலே கோத்தாபய ராஜபக்ஷ், மஹிந்த ராஜபக்ஷ் மற்றும் பசில் ராஜபக்ஷ் ஆகிய மூன்றுபேறும் தங்களின் பதவிகளில் இருந்து விலகிச்செல்ல நேரிட்டது என்பதை ஜனாதிபதி மறந்துவிடக்கூடாது.

எனவே ஜனநாயகத்தை மதிப்பதாக தெரிவிக்கும் ஜனாதிபதி, தேர்தல் நடத்தப்போவதில்லை என பாராளுமன்றத்துக்கு தெரிவித்த கருத்தை வாபஸ் பெற்றுக்கொண்டு, தேர்தலை நடத்தி, திரிபுபடுத்தப்பட்டிருக்கும் மக்கள் ஆணையை உறுதிப்படுத்தி வெளிப்படைத்தன்மையுடன் நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஜனாதிபதியின் கூற்றால் மக்கள் விரக்தியடைந்துள்ளனர். அதனால் அந்த கவலையுடன் இந்த நாட்டில் மாற்றம் ஒன்று ஏற்படவேண்டும். அந்த மாற்றம் அமைதியான ஜனநாயக முறையில் இடம்பெறவேண்டும். நிச்சயமாக அந்த பாரிய மக்கள் சக்தி உருவாகும்.

அத்துடன் ஜனாதிபதி நன்றியுடையவராக இருந்தால் மக்கள் போராட்டத்துக்கு நன்றி செலுத்தவேண்டும். அவர் ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கு போராட்டமே காரணமாக இருந்தது. நாட்டில் அமைதியான பொது மக்கள் போராட்டமே இடம்பெற்றது.

அலரிமாளிகையில் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மைனா கோகம மற்றும் கோட்டா கோகம போராட்டக்காரர்கள் மீது மிலேச்சத்தனமான முறையில் மேற்கொண்ட தாக்குதல் காரணமாகவே அமைதியான போராட்டம் வன்முறையாக மாறியது.

அதனால் அன்றைய தினம் காலையிலும் மாலையிலும் வன்முறையில் ஈடுபட்டவர்களை சட்டத்துக்கு முன்னால் கொண்டுவந்து சட்டத்தை நிலைநாட்ட வேண்டும்.

ஆனால் மக்கள் தகங்களின் உரிமைகளுக்காக அமைதியான முறையில் வீதிக்கிறங்கி போராடுவதை அவசரகால சட்டத்தை பயன்படுத்தி இராணுவத்தை இறக்கி அடக்குவதற்கு நாங்கள் இடமளிக்கப்போவதில்லை. எந்தவாெரு அமைதியான மக்கள் போராட்டத்துக்கும் நாங்கள் ஆதரவளிப்போம்.

Previous Post

பாரிய மனிதாபிமான நெருக்கடியின் விளிம்பில் இலங்கை | சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

Next Post

எனக்கு நேர்ந்ததே கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் நேர்ந்துள்ளது என்கிறார் மைத்திரி

Next Post
பிரதமரினால் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது | மைத்திரி

எனக்கு நேர்ந்ததே கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் நேர்ந்துள்ளது என்கிறார் மைத்திரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிக்க தீர்மானம்

July 1, 2026

Recent News

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிக்க தீர்மானம்

July 1, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures