யேமனில் மேலும் ஒரு மில்லியன் சிறார்கள் பஞ்சத்தை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளதாக ‘சேவ் த சில்ரன்’ அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உணவு விலை அதிகரிப்பு மற்றும் யேமனிய நாணயப் பெறுமதியின் வீழ்ச்சி போன்றவை இதற்குக் காரணங்கள் எனக் கூறப்படுகின்றது.
யேமனில் தற்போது மொத்தமாக 5.2 மில்லியன் சிறார்கள் பஞ்சத்தை எதிர்கொள்வதாக குறித்த தொண்டுநிறுவனம் தெரிவித்துள்ளது.