Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ் முஸ்லிம்களின் அவலநிலை:துணிச்சலுடன் வெளிப்படுத்தியஅமைச்சர் ரிஷாட்

January 5, 2018
in News, Politics
0

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ள யாழ் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள நிர்க்கதியினையும் அவலத்தினையும் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், யாழ் மண்ணிலே இடம்பெற்ற தேசிய மீலாத் விழா நிகழ்வில் வெளிப்படையாகவும், துணிகரமாகவும் பேசியுள்ளமை பாதிக்கப்பட்ட மக்களுக்கு மன ஆறுதலை தந்துள்ளதாக, புத்தளம் வாழ் வெளியேற்றப்பட்ட யாழ் – கிளிநொச்சி சிவில் சமூக ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அமைப்பின் தலைவர் மௌலவி அப்துல் மலிக், செயலாளர் ஹசன் பைரூஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது,

பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களில் குறிப்பாக யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மந்தகதியிலும், புறக்கணிப்புக்களுக்கும், இழுத்தடிப்புக்களுக்கும் மத்தியிலேயே நடைபெற்று வருவதை யாவரும் அறிவர்.

யாழ்ப்பாணத்தில் தேசிய மீலாத்விழாவை அண்மையில் நடாத்தினார்கள். இதனூடாக யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தும் வகையில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரைகளுக்கு அமைவாகவும், பல அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அமைச்சர் ஹலீமும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கினார். எனினும், இந்த அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவதற்காக கச்சேரிகளிலும், உள்ளூராட்சி மன்றங்களிலும் பல பணிப்புரைகள் வழங்கப்பட்ட போதும், உரியவர்களினால் இவை கணக்கெடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.

யாழ் முஸ்லிம்களின் விடிவை முன்னோக்கி அமைச்சர் ரிஷாட்டினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டதனால், அந்த விடயங்களை அவர் மீலாத் விழாவில் வெளிப்படுத்தினார். எனவே, சமூகத்துக்கு ஏற்பட்ட அநீதியை சுட்டிக்காட்டியமையை அரசியலாக யாரும் நோக்கக் கூடாது. யாழ் முஸ்லிம்களின் விமோசனத்துக்காகவும், விடுதலைக்காகவுமே அவர் இந்தக் கூட்டத்தில் முஸ்லிம்களின் அவலத்தை தெளிவுபடுத்தினார்.

அரசின் முக்கியஸ்தர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்ட ஒரு தேசிய விழாவில், இங்கு வாழும் முஸ்லிம்களின் பிரச்சினைகளை எடுத்துக்கூறி, சந்தர்ப்பத்தை மிகச்சரியாக அவர் பயன்படுத்தியிருப்பது பொருத்தமானதே. தேசிய மீலாத் விழாவில் இந்த நாட்டின் ஜனாதிபதி பங்கேற்காமை முஸ்லிம் சமூகத்துக்கு வருத்தம் தருகின்றது.

சிறுபான்மை மக்களின் அர்ப்பணிப்பினால் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசின் நாயகர்களாக விளங்கும் உயர்மட்டத் தலைவர்களின் தற்போதோய போக்கு, அவர்கள் இந்தச் சமூகத்தின் மீது கொண்டுள்ள அக்கறையை படம்போட்டுக் காட்டுகின்றது.

முஸ்லிம்களுக்கு உரித்தான 2௦௦ வீடுகளில் 36 வீடுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மீதிப்பணம் திரும்பி திறைசேரிக்கு சென்றுள்ளமை அகதி முஸ்லிம்களை உளரீதியாகப் பாதிப்படைய வைத்துள்ளது.
மீள்குடியேற்றத்துக்காக வடக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளும், சமூக அமைப்புக்களும் நமது உறவுகளும் பாடுபட்டு வருகின்றனர்.

உண்மை, நீதி, இழப்பீடு, மீள்நிகழாமை என்ற ஐ.நாவின் முன்மொழிவுகள் எவற்றிலுமே வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை கவனத்திற்கு எடுக்காமை, சர்வதேச சமூகத்தின் மாற்றாந்தாய் மனப்பான்மையையே காட்டுகின்றது.

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு உதவி அவர்களை நிம்மதியாக வாழ வைக்க காத்திரமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Previous Post

500 கடும்போக்காளர்களுக்கு இலங்கையில் தடை

Next Post

ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக பிடியாணை

Next Post

ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக பிடியாணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026
தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

June 19, 2026
தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026

Recent News

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026
தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

June 19, 2026
தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures