நாடாளுமன்றில் தெரிவிக்கப்படுவது போன்று யாழ்ப்பாணத்தில் புலிகள் மீள உருவாகவில்லை. 20 வயதுகொண்ட நாலைந்து பெடிகளுக்கு இடையே சிறு சிறி மோதல்களே அடம்பெறுகின்றன. அவையும் கட்டுப்பாட்டிக்குள் கொண்டுவரப்படும்
இவ்வாறு வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் மீளவும் விடுதலைப் புலிகள் உருவாகிவிட்டனர் என நாடாளுமன்றில் சிலர் பேசுகின்றனர். அவ்வாறு ஒரு நிலமை யாழ்ப்பாணத்தில் இல்லை.
20 வயது இளைஞர்கள் நாலைந்து பேர் மோதிக்கொள்கின்றனர். அவர்களில் பலர் சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர். வெளியில் உள்ளவர்கள் சிலர் இரு தரப்புகள் தங்களுக்கு இடையே மோதிக்கொள்கின்றனர்.
அவர்களின் நோக்கம் சிறைகளிலுள்ளவர்களின் மனநிலை மாறக்கூடாது என்பதேயாகும்’ என்றும் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ கூறினார்.