இனவாதம், மதவாதம், மோதல் அற்ற நிலையான தேர்தலுக்காக முன் நிற்குமாறு நுவரெலியா மாவட்ட சர்மத அமைப்பு பொது மக்கள் இடையே துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகின்றது.
இந்த துண்டு பிரசுரங்கள் இன்றைய தினம் முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
உள்ளூராட்சி தேர்தலினை முன்னிட்டு சர்மத அமைப்பு ஜனநாயகதிற்காக எமது பங்களிப்பை செலுத்தி உள்ளூராட்சி மன்றங்களுக்கு சரியான நபர்களை தெரிவு செய்யுமாறும், நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் இந்த வாக்குகளை பயன்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, நுவரெலியா மாவட்ட சர்மத அமைப்பை சேர்ந்த சுமார் 30இற்கும் மேற்பட்ட குழுவினர் ஹட்டன் நகரத்தில் பேருந்து தரிப்பு நிலையம், பொதுச் சந்தை ஆகியவற்றில் பொது மக்கள் இடையே இந்த துண்டுப் பிரசுரம் விநியோகித்துள்ளனர்.