Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மெரினாவை நினைவிடக் கரையாக மாற்றலாமா?

August 11, 2018
in News, Politics, World
0

“சார், என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியும். கலைஞர் மேல விமர்சனம் இருந்தாலும், அவரோட இடத்துக்கு இன்னொருத்தர் வர முடியாதுங்கிற அளவுக்கு மரியாதை வைச்சிருக்கிறவன் நான்,” என்று தொடங்கினார் ஊடகவியலாளரான அந்த நண்பர்.

“நல்லாவே தெரியும். அவரைப்பத்திப் பேசுறப்ப எல்லாம் இதை நீங்க வெளிப்படுத்தியிருக்கீங்க,” என்றேன் நான். இந்த நேரத்தில் கலைஞர் பற்றி ஏதாவது எதிர்மறையாக எழுதி எக்கச்சக்கமாக வாங்கிக்கட்டியிருப்பாரோ என்று நினைத்தேன். அதைக் கேட்கவும் செய்தேன்.

“அப்படியெல்லாம் இல்லை சார். அவருக்கு மெரினாவில் அண்ணா சமாதி வளாகத்திலேயே இடம் ஒதுக்குனது சம்பந்தமா எனக்கு மாற்றுக் கருத்து இருக்கு. அதை உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கிட லாம்னுதான்…”

“சொல்லுங்க…”

“விசயம் கோர்ட்டுக்குப் போனப்பவே எனக்கு இந்தச் சிந்தனை வந்துச்சு. ஆனா திமுக தொண்டர் கள் உணர்ச்சிவசப்பட்டு நிக்கிறப்ப அதைப் விவாதிக்கிறது முறையா இருக்காதுன்னுதான், இப்ப உங்ககிட்ட மட்டும் பேசுறேன். எனக்கு அதிலே உடன்பாடு இல்லை சார். கலைஞருக்கு சிறப்பான மெமோரியல் கட்டணும்கிறதுல எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதுக்கு மெரினா வைப் பயன்படுத்துறது சரியில்லைன்னு நினைக்கிறேன். அவருக்கு மட்டுமில்லை, யாருக்குமே அந்த இடத்தை அப்படிப் பயன்படுத்தக்கூடாதுன்னு நினைக்கிறேன். ஏற்கெனவே அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு அங்கே இடம் ஒதுக்குனது கூடத் தப்புதான்னு சொல்றேன். உங்க கருத்து என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு அப்புறம் பதிவு பண்ணலாம்னு….”

இந்தக் கருத்து பலருக்கும் இருக்கிறது. அதை வெளிப்படுத்துவதில் தயக்கமும் பலரிடத்தில் இருக்கிறது. சமூக ஊடகங்களில் தங்கள் உடன்பாடின்மையை வெளிப்படுத்தியவர்கள் இருக்கி றார்கள். அவர்களில், கலைஞருடனான அரசியல் வேறுபாடு காரணமாக இதற்கு உடன்படாத வர்கள் உண்டு. வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களில், இயக்கச்சார்பு எதுவும் இல்லாதவர்களில், அவரது ஆளுமையையும் பங்களிப்புகளையும் ஏற்கிறவர்களானாலும், மெரினா போன்றதொரு முக்கியத்துவம் வாய்ந்த இடம் இவ்வாறு தலைவர்களின் நினைவிட மையமாக்கப்பட்டு விடக்கூடாது என்ற கோணத்தில் உடன்படாதவர்களும் உண்டு.முக்கியப் பிரமுகர் முட்டுக்கட்டை?

அந்த இடத்திற்கான கோரிக்கையை ஏற்பது தொடர்பாக அதிமுக நிர்வாகிக்ளுக்கிடையே இரண்டு நிலைப்பாடுகள் வந்தன என்று ‘ஆனந்தவிகடன்’ இணையப்பதிப்புச் செய்திக்கட்டுரை தெரி விக்கிறது. அனுமதிப்பதன் மூலம் ஆட்சிக்குப் பொதுமக்களிடம் நற்பெயர் கிடைக்கும் என்று ஒரு பிரிவினரும், கட்சித் தொண்டர்களின் ஆதரவை முழுமையாகத் தக்கவைக்க திமுக எதிர்ப்பு என்ற அதிமுக பாரம்பரியத்தைத் தொடர வேண்டும் என்று இன்னொரு பிரிவினரும் வற்புறுத்தி னார்களாம்.

அனுமதிப்பதில்லை என்று முதலில் எடுத்த முடிவு மத்திய ஆட்சியாளர்களிடமிருந்து வந்த நிர்ப்பந்தம் எனத் தமிழக ஆட்சியாளர்கள் தரப்பிலிருந்து திமுக தலைவர்களுக்குச் சொல்லப் பட்டதாக அந்தச் செய்திக்கட்டுரை தெரிவிக்கிறது.

ஒரு “முக்கியப் பிரமுகர்” தலையிட்டு, கருணாநிதிக்கு அண்ணா நினைவிட வளாகத்தில் இடம் ஒதுக்கினால், அந்த இடமே கடவுள் மறுப்பாளர்களுக்கான இடமாக அடையாளம் பெற்றுவிடும், ஆகவே சட்டக் காரணங்களைச் சொல்லித் தவிர்த்துவிடுமாறு சொன்னதாகவும் அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது.

சித்தாந்த அடிப்படையில் அனுமதி மறுக்கச் சொன்னவர் யாராக இருக்கும் என்று நான் முகநூலில் கேட்டிருந்ததற்கு வந்த பதில்களில் பலவும் தற்போது ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளவரைக் குறிப்பிடுவதாக இருக்கின்றன.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி மெரினாவிலேயே இடம் தரப்பட்டது. இறுதி மரியாதை நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், மத்திய அரசின் சார்பில் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இருவரும் கலந்துகொண்டனர்.

மறுநாள் செய்தியாளர்கள் பேட்டியளித்த ஜெயக்குமார், திமுக முன்வைத்த மற்ற அத்தனை கோரிக்கைகளையும் அரசு ஏற்றது என்றும், மெரினா பிரச்சனையை மு.க.ஸ்டாலின் அரசியலாக்கு கிறார் என்றும் கூறினார்.

ராஜாஜி, காமராஜர், பெரியார், ஜானகி ராமச்சந்திரன் ஆகியோருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க மறுத்தவர் அவர்கள் காலமானபோது முதலமைச்சராக இருந்த கருணாநிதிதான் என்றும் ஜெயக்குமார் கூறினார்.

Previous Post

அறந்தாங்கியில் கலைஞர் கருணாநிதிக்கு வெண்கலச் சிலை

Next Post

சூரியனுக்குச் செல்லும் உலகின் முதல் செயற்கைக்கோள்! நாசா ரோக்ஸ்

Next Post

சூரியனுக்குச் செல்லும் உலகின் முதல் செயற்கைக்கோள்! நாசா ரோக்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026
யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

July 23, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

எம்மீதான அடக்குமுறையே சமஷ்டியைக் கோரியது, தனி ஈழத்தையும் தீர்வாக்கியது | ரவிகரன்

July 23, 2026

Recent News

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026
யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

July 23, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

எம்மீதான அடக்குமுறையே சமஷ்டியைக் கோரியது, தனி ஈழத்தையும் தீர்வாக்கியது | ரவிகரன்

July 23, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures