Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை தோலுரித்து காட்டிய சீனா: ஆச்சரியத்தில் உலக நாடுகள்

June 8, 2016
in News, World
0
மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை தோலுரித்து காட்டிய சீனா: ஆச்சரியத்தில் உலக நாடுகள்

மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை தோலுரித்து காட்டிய சீனா: ஆச்சரியத்தில் உலக நாடுகள்

மும்பையில் கடந்த 2008 நவம்பரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானும், லஷ்கர் இ தொய்பாவுமே காரணம்என முதன் முறையாக சீனா பகிரங்கமாக தெரிவித்துள்ளது உலகநாடுகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பைக்குள் கடந்த 2008 ஆம் ஆண்டு, கடல் மார்க்கமாக நுழைந்த லஷ்கர் இதொய்பா தீவிரவாதிகள் 10 பேர் தாஜ் ஓட்டல், நாரிமன் இல்லம், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் வெளிநாட்டு பயணிகள் உட்பட 166 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள அனைத்து முக்கிய உறுப்பு நாடுகளும் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் உத் தவா தீவிரவாதிகள் ஹபீஸ் அப்துல் ரஹ்மான்மக்கி, தல்ஹா சயீத், ஹபீஸ்அப்துல் ரவுஃப் ஆகிய மூன்று தீவிரவாதிகளுக்கு தடை விதிக்க ஆதரவு தெரிவித்திருந்தன.

இதற்கு தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி சீனா தடுத்து நிறுத்தியிருந்தது.

மூன்று தீவிரவாதிகளுக்கான தடையை நிறுத்தி வைத்ததற்கான சீனாவின் முடிவு நாளையுடன் காலாவதியாகவுள்ள நிலையில், லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு பற்றியும், நவம்பர் 26 மும்பை தாக்குதல் சம்பவத்தில் அதன் பங்கு பற்றியும், பாகிஸ்தானில் இருந்து இதற்காக அளிக்கப்பட்ட நிதியுதவிகள் பற்றியும் தனது சிசிடிவி9 தொலைக்காட்சியில் சீனா ஆவணப்படமாக சமீபத்தில் ஒளிபரப்பியுள்ளது.

இதுவரை பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட சீனா முதன் முறையாக மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு காரணமானவர்களை கூறியுள்ளது உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags: Featured
Previous Post

சிரியாவின் அலெப்போவில் தொடர் வான் வழி தாக்குதல்கள்: 10 பேர் பலி பலர் படுகாயம்

Next Post

வெடிகுண்டு மிரட்டல்: 118 பயணிகளுடன் சென்ற எகிப்து விமானம் அவசரமாக தரையிறக்கம்

Next Post
வெடிகுண்டு மிரட்டல்: 118 பயணிகளுடன் சென்ற எகிப்து விமானம் அவசரமாக தரையிறக்கம்

வெடிகுண்டு மிரட்டல்: 118 பயணிகளுடன் சென்ற எகிப்து விமானம் அவசரமாக தரையிறக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures