இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (18) உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் முன்னாள் அமைச்சர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதம நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, கெஹெலிய ரம்புக்வெல்ல தொடர்பிலான மற்றுமொரு வழக்கின் விசாரணைகள் நீதிமன்றத்தில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.













