Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

முதல்வர் பதவி எனக்கே! சசிகலாவிடம் மல்லுக்கட்டும் நடராஜன்

January 10, 2017
in News
0
முதல்வர் பதவி எனக்கே! சசிகலாவிடம் மல்லுக்கட்டும் நடராஜன்

முதல்வர் பதவி எனக்கே! சசிகலாவிடம் மல்லுக்கட்டும் நடராஜன்

முதல்வர் பதவியை தமக்கே விட்டுத் தர வேண்டும் என்று சசிகலாவின் கணவர் நடராஜன் திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளதால் போயஸ் கார்டன் பங்களா களேபரமாகி வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எப்படியாவது முதல்வர் நாற்காலியில் அமர்ந்தே தீருவது என்பதில் படுதீவிரமாக இருக்கிறார் சசிகலா.

பதவி பேராசையால் சசிகலா, எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒருநாளாவது முதல்வர் நாற்காலியில் அமர்ந்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

இதனிடையே சசிகலா கணவர் நடராஜனிடம், நீங்களே முதல்வராகி விடுங்கள் என அரசியலில் குழப்பமான நிலையை மேற்கொண்டு வரும் ஒரு துண்டு தலைவர் தூபம் போட்டபடியே இருக்கிறாராம்.

அதாவது சசிகலா முதல்வர் நாற்காலியில் அமர்ந்தால் குடும்ப உறவுகள் அனைத்தும் ஆளுக்கு ஒரு அதிகார மையங்களாகி விடுவர்; மத்திய அரசு உங்களை நசுக்க ஏதுவாகி விடும்; ஆகையால் நீங்கள் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தால் உங்கள் உறவுகளை நீங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஒரே அதிகார மையமாக செயல்படலாம் என்று அந்த தலைவர் தூபம் போட்டிருக்கிறார்.

அவரது இந்த கருத்தை ‘மூத்த’ ஒரு அரசியல்வாதியும் ஆமோதிக்கிறாராம். நமக்கு வேண்டிய இரு தலைவர்களுமே இப்படி சொன்னால் சரியாக இருக்கும் என்பதால் இப்போது முதல்வர் பதவியை எனக்கே விட்டுத் தர வேண்டும் என சசிகலாவிடம் மல்லு கட்டியிருக்கிறார் நடராஜன்.

ஆனால் சசிகலாவோ, ஒருநாளாவது முதல்வர் நாற்காலியில் அமர்ந்தே தீருவேன் என அடம்பிடித்து வருகிறாராம். இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் நடராஜன் அந்த துண்டு தலைவரிடம் புலம்பியிருக்கிறார்.

இருந்தபோதும் மத்திய அரசிடம் நான் பேச முயற்சிக்கிறேன்… நீங்கள் முதல்வரானால் மத்திய அரசுக்கு அனுசரணையாக நடந்து கொள்வீர்கள் என வாக்குறுதி தர முயற்சிக்கிறேன் என துண்டை இழுத்துப் போட்டு சபதம் போடாத குறையாக பேசினாராம் அந்த தலைவர்.

நடராஜனின் இந்த முயற்சி அதிமுக எம்எல்ஏக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம்.

Tags: Featured
Previous Post

ஜெயலலிதா அப்போதே இறந்துவிட்டார்: அப்பல்லோ மருத்துவர் வெளியிட்ட பகீர் தகவல்

Next Post

தாய்லாந்தில் தொடரும் இயற்கையின் சீற்றம்: 18 பேர் பலி

Next Post
தாய்லாந்தில் தொடரும் இயற்கையின் சீற்றம்: 18 பேர் பலி

தாய்லாந்தில் தொடரும் இயற்கையின் சீற்றம்: 18 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures