Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முதலமைச்சருக்கு எதிராக வழக்கு!

September 7, 2017
in News
0

வடமாகாண முதலமைச்சரின் சட்டமுரணான செயற்பாடுகளை தெளிவுபடுத்தி என்னால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினால், 13 வது திருத்தச்சட்டம் தொடர்பான சில முக்கிய தீர்மானங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது என முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் (புதன்கிழமை) டெனிஸ்வரன் விடுத்துள்ள ஊடக அமைச்சர் மூலமாகவே இதனைக் கூறியுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த வழக்கு தாக்கல் செய்வதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன, அவற்றில் ஒன்று வடமாகாண முதலமைச்சரின் பழிவாங்குகின்ற விடயங்களையும் அதேநேரம் சட்டமுரணாக அவர் செயற்பட்ட விடயங்களையும் நீதிமன்றத்தின் ஊடக சுட்டிக்காட்ட வேண்டுமென்பது.

அடுத்தது முதலமைச்சரின் செயற்பாடு பிழையென நீதிமன்றம் தீர்ப்பளிக்குமாயின், முதலமைச்சருக்கு ஒரு அமைச்சரை நீக்குவதற்க்கான அதிகாரம் இந்த 13 வது திருத்தச்சட்டத்தில் இல்லையென்பதனையும் நிரூபிக்க முடியுமென்பதாகும்.

இத்திருத்தச் சட்டத்தின் மூலம் கிடைக்கபெற்ற மாகாணசபை நாம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தீர்வாக இருந்தபோதும் தமிழ்தேசிய கூட்டமைப்பானது மக்களுக்கு செய்யவேண்டிய சில அவசர தேவைகள் மற்றும் வேலைத்திட்டங்களை கருத்தில்கொண்டு இவ் ஆட்சி அலகினை ஏற்று இருக்கின்றது.

ஆனால் அதில் போதிய அதிகாரமும் இல்லை என்பதனையும் இவ்வழக்கினூடாக சுட்டிக்காட்ட முடியும்.

13ஆவது சட்டதிருத்தத்தில் முதலமைச்சருக்கு போதிய அதிகாரம் இல்லையென்ற தீர்ப்பு வழங்கப்படுமென்று சொன்னால் அதில் இருக்கின்ற குறைபாடுகளையும் அதிகாரப்பகிர்வின்மையையும் எமது மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் ஆணித்தரமாகவும் வெளிப்படையாகவும் எடுத்துக்காட்டகூடிய சந்தர்ப்பமாக இவ்வழக்கு அமைகின்றது.

ஒருவேளை முதலமைச்சருக்கு ஒரு அமைச்சரை நீக்குகின்ற அதிகாரம் இருக்கிறது என்று தீர்ப்பு வழங்கப்படும் எனின் 13ஆவது சட்டதிருத்தத்தில் ஓரளவுக்கு அதிகாரம் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதனையும் எடுத்துக்காட்ட முடியும்.

ஆகவே எத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டாலும் அது தனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

நாளையதினம் (இன்று வியாழக்கிழமை) இவ்வழக்கு விளக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது அதன்போது இரண்டு விடயங்கள் நடைபெறுவதற்க்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

ஒன்று வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் அவ்வாறான சட்டமீறல்கள் நடைபெற்றிருக்குமென்று மேல்முறையீட்டு நீதிமன்றம் திருப்திப்படுமாயின் உடனடியாகவே தடை உத்தரவு பிறப்பிப்பதர்க்கான சந்தர்ப்பம் இருக்கின்றது.

அவ்வாறு இல்லையெனில் இரண்டு வாரங்களுக்குள் முதலமைச்சர் அவர்களும் ஏனைய பிரதி மனுதாரர்களும் தங்களது பதில்களை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்படும்.

அவ்வாறு அவர்களின் பதில்கள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் நீதிமன்றமானது உரிய விசாரணைகளை மேற்கொண்டு இறுதியான தீர்ப்புக்கு வரக்கூடிய சந்தர்ப்பமும் காணப்படுவதுடன் குறித்த தீர்ப்பு விரைவில் வழங்கப்படக்கூடிய சந்தர்ப்பமும் காணப்படுகின்றது.

மேலும், எதிர்காலத்தில் சட்டமாணவர்கள் அரசியலமைப்பு தொடர்பாக கற்கின்றபோது இவ்வழக்கானது சுட்டிக்காட்டக்கூடிய வழக்காக அமையும்.

அதிகாரம் இல்லையென்ற விடயத்தினை நீதிமன்றம் வழங்குமென்று சொன்னால் உண்மையாகவே எமது மக்களுக்கு சமஸ்டி முறையிலான ஆட்சி அலகொன்று தேவை என்பதனை இவ்வுலகுக்கு வெளிப்படையாகவே சுட்டிக்காட்டப்படக்கூடிய ஒரு சந்தர்ப்பமாகவும் அமையப்போகின்றது எனவும் பா.டெனிஸ்வரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

பளையில் பாரிய குண்டு! 5 கிராமங்களை சேர்நத 546 குடும்பங்கள் வெளியேற்றம்

Next Post

பாகிஸ்தானில் பருவ மழைக்கு இதுவரை 164 பேர் பலி எனத் தகவல்

Next Post

பாகிஸ்தானில் பருவ மழைக்கு இதுவரை 164 பேர் பலி எனத் தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026

Recent News

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures