Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மீண்டும் பன்னீர்செல்வத்தை நாடும் சசிகலா கணவர் நடராஜன்: ஒன்றிணையும் அதிமுக?

February 25, 2017
in News
0
மீண்டும் பன்னீர்செல்வத்தை நாடும் சசிகலா கணவர் நடராஜன்: ஒன்றிணையும் அதிமுக?

மீண்டும் பன்னீர்செல்வத்தை நாடும் சசிகலா கணவர் நடராஜன்: ஒன்றிணையும் அதிமுக?

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்-ஐ மீண்டும் முதல்வர் இருக்கையில் அமர வைக்கும் ஆலோசனையில் மன்னார்குடி தரப்பு ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கியவுடன் அதிமுக 2 அணிகளாக சிதறியது.

ஆனால், இறுதில் சசிகலா ஆதரவுபெற்ற எடப்பாடி பழனிச்சாமியே தமிழக முதல்வர் பதவியில் அமர்ந்தார். அதேபோல், சசிகலாவின் நெருங்கிய உறவினரான டி.டிவி. தினகரன் அதிமுக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், மக்களின் ஆதரவு ஓ.பி.எஸ் பக்கமே இருக்கிறது என்பதை உளவுத்துறை மூலம் அறிந்தே வைத்திருக்கிறது சசிகலா தரப்பு. மேலும், முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்ட சசிகலாவும் சிறைக்கு சென்றுவிட்டார். எனவே, கட்சியையும், ஆட்சியையும் நிரந்தரமாக கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிவெடுத்த சசிகலாவின் கணவர் நடராஜன், இது தொடர்பாக சசிகலாவிடம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

அதாவது, இனி என்ன முயன்றாலும் சசிகலா முதல்வர் ஆக முடியாது. எனவே, கட்சி பதவி மட்டுமே போதும், தேவையில்லாமல் மக்களிடம் கெட்ட பெயர் வாங்குவதை விட சில தியாகங்களை செய்தால் கட்சி மற்றும் ஆட்சியை நம் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.

மேலும், அப்போதுதான் சசிகலா சிறையிலிருந்து வெளியே வரும்போது, அதிமுக தொண்டர்களின் ஆதரவை பெற முடியும் என நடராஜன் கருதுகிறாராம். இதை சசிகலாவிற்கும் அவர் புரிய வைத்துள்ளாராம்.

இதன் தொடர்ச்சியாக சில அதிரடி திட்டங்களை நடராஜன் தரப்பு கையில் வைத்திருப்பதாக தெரிகிறது. அதில் ஒன்றாக மக்கள் ஆதரவு பெற்ற ஓ.பி.எஸ்-ஐ மீண்டும் முதல்வராகவும் எடப்பாடி பழனிச்சாமியை துணை முதல்வராக நியமிக்கும் திட்டமும் இருக்கிறது என செய்திகள் வெளியாகியுள்ளது.

இதன் ஒருபகுதியாகவே ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் திடீரென்று ஓ.பி.எஸ் ஆதரவு நிலை எடுத்து ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதும், தினகரனுக்கு எதிராக பேசுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் எடப்பாடி அரசு மீது மக்களிடம் இருக்கும் கோபம் படிப்படியாக தணியும் எனவும் மன்னார்குடி தரப்பு கணக்கு போட்டுள்ளது. மட்டுமின்றி மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு அடுத்த சில மாதங்களில் அடுத்தடுத்த அதிரடி திட்டங்களை அறிவிக்கவும், நிதி ஒதுக்குவதில் தாராளத்தை கடைபிடிக்கவும் எடப்பாடி அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags: Featured
Previous Post

என் அம்மாவை சில இராணுவத்தினர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினர்

Next Post

வெறிச்சோடிய ஜெயலலிதா சமாதி!. பிறந்த நாளில் அ.தி.மு.க.வினர் எங்கே?

Next Post
வெறிச்சோடிய ஜெயலலிதா சமாதி!. பிறந்த நாளில் அ.தி.மு.க.வினர் எங்கே?

வெறிச்சோடிய ஜெயலலிதா சமாதி!. பிறந்த நாளில் அ.தி.மு.க.வினர் எங்கே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures