தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான 35வது சப்ஜூனியர் மற்றும் 45வது ஜூனியர் நீச்சல் போட்டிகள் வேளச்சேரியில் உள்ள சர்வதேச நீச்சல்குள வளாகத்தில் நடந்தன. ஜூன் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை ஃபிரீ ஸ்டைல், பிரெஸ்ட் ஸ்ட்ரோக், பட்டர் ஃபிளை என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் சிறுவர் பிரிவில் டர்ட்ல்ஸ் அணி 281 புள்ளிகளும், சிறுமியர் பிரிவில் எஸ். டி. ஏ. டி. அணி 299 புள்ளிகளும் பெற்று சாம்பியன் பட்டம் வென்றன.
இரண்டு பிரிவிலும் மொத்தம் 546 புள்ளிகள் பெற்ற சென்னையைச் சேர்ந்த எஸ். டி. ஏ. டி.
டால்பின் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
தொடர்ந்து நேற்று மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை ஷைனி வில்சல் பங்கேற்று வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் கைலாசம், சந்திரசேகர் பங்கேற்றனர்.