Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மஹிந்தவின் அரசியல் பயணத்தை நாமல், பஷில் முழுமையாக சீரழித்து விட்டனர் | விமல்

February 14, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
விமலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிக்கப்பட்டது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் பயணத்தை நாமல் ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ முழுமையாக சீரழித்து விட்டார்கள்.

ராஜபக்ஷர்களுடன் இனி ஒன்றிணைய போவதில்லை. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ சகோதரர்களுக்கு முன்னுரிமை வழங்கி 69 இலட்ச மக்களாணையை மலினப்படுத்தினார் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

புத்தளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) மாலை இடம்பெற்ற சுதந்திர மக்கள் கூட்டணி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக தீவிரமடையும் என முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் பலமுறை எடுத்துரைத்தோம்.

வெளிநாட்டு கையிருப்பு ஏதும் கிடையாது என முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ அமைச்சரவை தவறாக வழிநடத்தினார்.

பொருளாதார நெருக்கடி இறுதியில் பாரிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியது. இலங்கை அரசியல் வரலாற்றில் எவருக்கும் நேராத நிலைமை முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு ஏற்பட்டது.மக்கள் போராட்டத்திற்கு மத்தியில் உயிரை பாதுகாத்துக் கொள்ள நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் பயணத்தை நாமல் ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் முழுமையாக இல்லாதொழித்துள்ளார்கள்.

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை ராஜபக்ஷர்கள் குடும்பம் முழுமையாக ஆக்கிரமித்ததால் இரண்டரை வருட காலத்திற்குள் நாட்டில் பாரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டது.

சுதந்திர மக்கள் கூட்டணி தங்காலைக்கு அல்லது நெலும் மாவத்தைக்கு செல்லும் என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ராஜபக்ஷர்களுடன் இனியொருபோதும் ஒன்றிணைய போவதில்லை. அரசியல் ரீதியில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ராஜபக்ஷர்களுக்கு எதிராக தனித்து அரசியல் கூட்டணியை ஸ்தாபித்துள்ளோம்.

இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவதென்ற பிரச்சினை பொதுஜன பெரமுனவிற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் உள்ளது.

2019 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியை விமர்சித்து ஆட்சிக்கு வந்த பொதுஜன பெரமுன தற்போது ஐக்கிய தேசியக் கட்சியை முழுமையாக தஞ்சமடைந்துள்ளதை 69 இலட்ச மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் என்றார்.

Previous Post

நடிகர் நாசர் தலைமையில் சிறப்புற நடைபெற்ற தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் உரையாடல் நிகழ்வு

Next Post

தடையற்ற மின்விநியோகம் இடம்பெற வேண்டுமெனில் கட்டண அதிகரிப்பை தவிர்க்க முடியாது | காஞ்சன

Next Post
தடையற்ற மின்விநியோகம் இடம்பெற வேண்டுமெனில் கட்டண அதிகரிப்பை தவிர்க்க முடியாது | காஞ்சன

தடையற்ற மின்விநியோகம் இடம்பெற வேண்டுமெனில் கட்டண அதிகரிப்பை தவிர்க்க முடியாது | காஞ்சன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026

Recent News

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures