மன்னார் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகளைத் தேடி குறித்த வளாகம் மற்றும் அகழ்வு செய்யப்பட்ட மண் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள இடம் ஆகிய இரு இடங்களில் இன்றும் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில், ஒரே நேரத்தில் இரு அகழ்வு பணிகளும் ஆரம்பமானது.இதன் போது மனித எலும்புகள் மீட்கப்பட்டன. நில மட்டத்தில் இருந்து சுமார் 7 அடி ஆழத்தில் பரவலாக மனித எச்சங்கள் பரவலாக காணப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வளாகத்தில் நேற்றும் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.