Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மட்டக்களப்பில் :6139 மில்லியன் செலவில் 14177 அபிவிருத்தித் திட்டங்கள்

February 28, 2018
in News, Politics, Uncategorized, World
0

6139 மில்லியன் செலவில் 14177 அபிவிருத்தித் திட்டங்கள் இனங்காணப்பட்டு அவற்றில் 6080 மில்லியனில் 12496 திட்டங்கள் கடந்த 2017ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறைவு செய்யப்பட்டுள்ளன என மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மா.உதயகுமார் தெரிவித்தார்.
திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் 2018ஆம் ஆண்டுக்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வரவேற்புரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
மாவட்ட செயலகத்தினால் 2087.70 மில்லியன் செலவில் 6891 திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இணை அமைச்சுக்களின் 2385.99 மிலலியன் நிதியில் 4946 அபிவிருத்தித்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண சபையின் 845 மில்லியன் ரூபாவில் 524 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதே போன்று விசேட அபிவிருத்தித்திட்டத்தின் கீழான 608.8 மில்லியன் ரூபா நிதியில் 3 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் மாவட்ட அபிவிருத்திக்கான திட்டத்தின் ஊடாக 83 திட்டங்களுக்காக 433 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. அத்துடன் அரச சார்பற்ற நிறுவனங்களின் 49 திட்டங்களுக்காக 874.7 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டள்ளது.

இந்தத் திட்டங்களை உரிய காலத்தில் நிறைவுறுத்தி பொது மக்களுக்கு உதவிய இணைத்தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், மத்திய மாகாண அரச உத்தியோகத்தர்கள், சர்வதேச, உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

இவ்வாண்டு 11ஆயிரத்து 12 மில்லியன் ரூபாவுக்கான திட்டங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இவற்றுக்கான அனுமதிகள் வழங்கப்படுமிடத்து இந்த ஆண்டு இந்த வெலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்துழைப்புகளை எதிர்பார்க்கிறேன்.

அத்துடன், 2018ஆம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சிச் சபைத் தேர்தலில் ஒத்துழைப்பினை வழங்கிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாரின் வரவேற்புரையுடன் ஆரம்பமான மட்டக்களப்பு மாவட்டத்தின் 2018ஆம் ஆண்டுக்கான முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ச.வியாழேந்திரன் , பிரதேச செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள், அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Previous Post

மட்டக்களப்பு கதிரவெளியில் ஏற்பட்ட விபத்திற்கு வாகரை வீதியால் ரூட் வழங்கியதே காரணம்

Next Post

கலவரத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு !

Next Post
கலவரத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு !

கலவரத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026

Recent News

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures