Saturday, September 6, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மட்டக்களப்பில் இம்முறை இரண்டு பிரதான வாக்கெண்ணும் நிலையங்கள்

July 27, 2020
in News, Politics, World
0

மட்டக்களப்பில் இம்முறை பிரதான வாக்கெண்ணும் நிலையங்கள் இரண்டு அமைக்கப்படவுள்ளதாக மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்டச் செயலாளருமான கலாமதி பத்மராஜா தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மகாஜனக் கல்லூரி ஆகியவை பிரதான வாக்கெண்ணும் நிலையங்களாகவும் அமையப் பெறவுள்ளன.

இவற்றில் கல்குடா தேர்தல் தொகுதியில் அளிக்கப்படும் வாக்குகளை எண்ணுவதற்காக 15 வாக்கெண்ணும் நியைங்களும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் அளிக்கப்படும் வாக்குகளை எண்ணுவதற்காக 33 வாக்கெண்ணும் நிலையங்களும், பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் அளிக்கப்படும் வாக்குகளை எண்ணுவதற்காக 12 வாக்கெண்ணும் நிலையங்களும் தபால்மூல வாக்குளை எண்ணுவதற்காக 07 வாக்கெண்ணும் நிலையங்களுமாக மொத்தம் 67 வாக்கெண்ணும் பிரிவுகள் அந்தப் பிரதான வாக்கெண்ணும் இரு நிலையங்களிலும் இயங்கவுள்ளன.

வாக்கெண்ணும் பணிகளுக்காக 67 பிரதான வாக்கெண்ணும் அலுவலர்களும், 274 தெரிவத்தாட்;சி உதவி அலுவலர்களும், 449 சிரேஷ்ட தலைமைதாங்கும் அலுவலர்களும், 620 வாக்கெண்ணும் கனிஷ்ட தலைமைதாங்கும் உத்தியோகத்தர்கள் எழுதுவினைஞர்களும், 67 சுகாதார வழிகாட்டல் உத்தியோகத்தர்களும், 134 அலுவலக உதவியாளர்கள் அடங்கலாக 1611 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தேர்தல் கடமைகளில் வாக்குப் பெட்டிகள், வாக்குச்சீட்டுக்கள் வழங்கல், பொறுப்பபேற்றல் கடமைகளில் 70 தெரிவத்தாட்சி உதவி அலுவலர்களும், 120 சிரேஷ்ட தலைமைதாங்கும் உத்தியோகத்தர்களும், 140 கனிஷ்ட தலைமைதாங்கும் உத்தியோகத்தர்கள் எழுதுவினைஞர்களும், 60 சுகாதார வழிகாட்டல் உத்தியோகத்தர்களும், 60 அலுவலக உதவியாளர்கள் உள்ளடங்கலாக 450 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.இம்முறை வாக்கெண்ணும் பணிகள் தேர்தல் தினத்திற்கு மறுதினமாகிய ஆகஸ்ட் 06ஆந் திகதி காலை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Previous Post

பாடசாலைக்கு அருகில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

Next Post

நாடளவில் அமுலிலுள்ள சுகாதார வழிகாட்டல்களை நல்லூர் திருவிழாவில் உறுதிப்படுத்துங்கள் – வடக்கு ஆளுநர்

Next Post

நாடளவில் அமுலிலுள்ள சுகாதார வழிகாட்டல்களை நல்லூர் திருவிழாவில் உறுதிப்படுத்துங்கள் – வடக்கு ஆளுநர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures