மகாராஷ்டிரா மாநிலம் பிஹிவாண்டியில் நெர்போலி என்ற இடத்தில் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் கிளை அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ மளமளவென மற்று பகுதிகளுக்கும் பரவியது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் 3 வாகனங்களில் வந்து தீயை அணைத்தனர். இரவு நேரத்தில் தீப்பிடித்ததால் உயிரிழப்பு ஏதும் இல்லை.
இருப்பினும் இந்த தீ விபத்தில் பல ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
மின்கசிவா அல்லது நாசவேலையா என விசாரணை நடைபெற்று வருகிறது.