ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசியை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிவிடுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (21) இரவு இடம்பெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அறிவித்தலை இன்று (22) பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு எழுத்து மூலம் அறிவிக்கவுள்ளதாகவும் அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதற்கு இணைந்த பௌசி எம்.பி.க்கு எதிராக விசாரணை மேற்கொள்ள ஸ்ரீ ல.சு.க.யினால் நியமிக்கப்பட்ட ஓழுக்காற்றுக் குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.