Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

போர்க்குற்ற விவகாரம்! அமெரிக்காவிடம் சரணடையும் இலங்கை

February 6, 2017
in News
0
போர்க்குற்ற விவகாரம்! அமெரிக்காவிடம் சரணடையும் இலங்கை

போர்க்குற்ற விவகாரம்! அமெரிக்காவிடம் சரணடையும் இலங்கை

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஜெனீவா பிரேரணைக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ட்ரம்ப் இலங்கை உள்ளிட்ட நாடுகள் தொடர்பில் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிப்பதுடன், சர்வதேச அநீதிகளை உதாசீனம் செய்யும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்.

எனினும் அமெரிக்காவின் முன்னைய நிர்வாகம் உலகளாவிய சிறுபான்மை இனங்கள் தொடர்பில் கரிசனையுடன் செயற்பட்டிருந்தது. இதன் காரணமாகவே இலங்கையில் நடைபெற்ற விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் கலப்பு பொறிமுறை விசாரணையொன்றை மனித உரிமைகள் ஆணையத்தில் வலியுறுத்தியிருந்தது.

இலங்கைக்கு எதிராக சர்வதேச அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பாக நியாயமான விசாரணையொன்றை மேற்கொள்ள வலியுறுத்தும் நோக்கில் இந்தப் பிரேரணை கொண்டு வரப்பட்டிருந்தது. எனினும் இலங்கை அரசாங்கத்துக்கு விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் குறித்த விசாரணை தொடர்பில் எதுவித நடவடிக்கைகளும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ட்ரம்பின் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான போக்கை சாதகமாக கையாண்டு, குறித்த பிரேரணையை கிடப்பில் போடும் முயற்சிகள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் தற்போது திரும்பியுள்ளது.

இதன் ஒரு கட்டமாக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் அமெரிக்காவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதுடன், இன்று அமெரிக்காவின் ராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

Tags: Featured
Previous Post

விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு ஆதரவாக ஒரு தேரர்

Next Post

ஓபிஎஸ் முதலமைச்சர் பதவியை விட்டு விலகியது ஏன்? பின்னனி யார்? ஆளுநருக்கு பரபரப்பு கடிதம்

Next Post
ஓபிஎஸ் முதலமைச்சர் பதவியை விட்டு விலகியது ஏன்? பின்னனி யார்? ஆளுநருக்கு பரபரப்பு கடிதம்

ஓபிஎஸ் முதலமைச்சர் பதவியை விட்டு விலகியது ஏன்? பின்னனி யார்? ஆளுநருக்கு பரபரப்பு கடிதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures