Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

போருக்கு தயார்! பீரங்கி படை தாக்குதலை அதிரடியாக நடத்தி காட்டிய வட கொரியா

April 27, 2017
in News
0
போருக்கு தயார்! பீரங்கி படை தாக்குதலை அதிரடியாக நடத்தி காட்டிய வட கொரியா

அமெரிக்கா தாக்குதலுக்கு தயார் என கூறும் வகையில் படுபயங்கரமான பீராங்கி தாக்குதல் பயிற்சியை கிம் ஜாங் முன்னிலையில் வட கொரியா ராணுவம் இன்று நடத்தியுள்ளது.

வட கொரியா உலக நாடுகளை அச்சுறுத்தும் விதத்தில் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.

மேலும், அமெரிக்க, ஜப்பான் போன்ற நாடுகளை தகர்ப்போம் என பீதியை கிளப்பி வருகிறது.

வட கொரியாவின் அணு ஆயுத சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் போர் கப்பல் அணியை கொரிய தீபகற்பத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

போர் கப்பல்களை எதிர் கொள்ள தயார் என கூறும் வகையில் அது வட கொரியாவுக்கு வந்து சேரும் முன்னர் அந்நாடு வரலாறு காணாத வகையில் பீராங்கி தாக்குதல் பயிற்சியை கிம் ஜாங் முன்னர் நடத்தியுள்ளது.

இந்த பயிற்சியில் போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களும் பங்கேற்றது.

கரையோரத்தில் 300 பெரிய துப்பாக்கி சுழற்சிகளால் இயக்கப்படும் துப்பாக்கி பீரங்கிகளிலிருந்து நெருப்புகள் பாய்ந்தது

வட கொரியாவின் 85வது ராணுவ வருடத்தை கொண்டாடும் விதத்திலும் இது நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது பீராங்கியிலிருந்து நெருப்பு குண்டுகள் சீறி பாய்ந்தன.

ஒவ்வொரு முறையும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இலக்குகளைத் தாக்கும் போது அதை கிம் ஜாங் பாராட்டினார்.

உங்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என அமெரிக்காவுக்கு வட கொரியா சவால் விடவே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

advertisement
Tags: Featured
Previous Post

அணு ஆயுதம் வீசப்பட்ட கடைசி நொடியில் உங்களுக்கு வரும் மெசேஜ் என்ன தெரியுமா? 2 hours ago உலகம் 4.63k SHARES PrintReport us0 Comments Topics : #NorthKorea2017US#North Korea#United States of America அமெரிக்கா, வடகொரியா, ரஷ்யா போன்ற நாடுகள் மூன்றாம் உலகப்போருக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு பனிபோர் வலுத்து வருகிறது. இந்த விடயத்தில் இந்த நாடுகள் மட்டுமின்றி, பல நாடுகளும் மறைமுகமாக செயல்பட்டு வருகின்றன. நாம் வாழும் ஒரு பிரதேசத்தில் ஆணு ஆயுத தாக்குதல் நடந்தால், நாம் உயிர் பிழைத்துக் கொள்ள நமக்கு கிடைக்கும் ஒரு கடைசி வைப்பு எதுவாக இருக்கும், உங்களுக்கு தெரியுமா… நான்கு நிமிடம் எச்சரிக்கை அமைப்பு என்பது ஒரு தேசிய அமைப்பு சார்ந்த எச்சரிக்கை ஒலியாகும், குறிப்பாக இது ஒரு அணு தாக்குதலுக்கு முன்பு எழுப்பப்படும் எச்சரிக்கையாகும். 1992-களில் பெரும்பாலான மக்கள் அணு ஆயுத தாக்குதலில் இருந்து தப்பி பிழைப்பதற்கு இந்த நான்கு நிமிட எச்சரிக்கை தான் காரணம். அதுவே மூன்றாம் உலக உலகப்போர் நிகழ்ந்தால், அதில் அணு ஆயுத தாக்குதல்கள் நடந்தால் 1992-களில் கிடைத்தது போல நமக்கு நான்கு நிமிட எச்சரிக்கை கிடைக்க வாய்ப்பே இல்லை. அதற்கு பதிலாக நமது தொலைப்பேசிகளில் மெசேஜ் வரலாம் என்று நம்பப் படுகிறது, அதாவது அணு ஆயுத தாக்குதலுக்கு முன்பு வரும் எச்சரிக்கை தகவல். சில நாட்டு அரசாங்கம் அணு ஆயுத தாக்குதல்களின் பேரழிவுகளில் இருந்து நாட்டு மக்கள் தப்பி பிழைத்துக் கொள்ள கடைசி நேர குறுந்தகவல் ஒன்று அனுப்பும் தொழில்நுட்பத்தை சோதித்துள்ளன. தேசிய பாதுகாப்பு கவுன்சில் மூலம் உருவாக்கம் பெற்ற இந்த பாதுகாப்பு அமைப்பானது 2013-ஆம் ஆண்டு கிளாஸ்கோ மற்றும் யார்க்ஷயரில் சோதனை செய்யப்பட்டது. உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளும்படியாக குறுந்தகவல் வந்தாலும், அந்த மிக குறுகிய நேரத்தில் ஒன்றும் செய்திட இயலாது என்பது தான் உண்மை. ‘ நான்கு நிமிடம் எச்சரிக்கை அமைப்பு இருந்த காலத்தில் கூட, அதிகபட்சம் மூன்று நிமிட நேரம் கிடைக்கும் ஆனால் அதையே மொபைல் குறுந்தகவலில் எதிர்பார்க்க முடியாது அதிலும் குறிப்பாக நீங்கள் அணு ஆயுத தாக்குதல் நிகழ்த்தப்படும் இடத்தின் அருகாமையில் இருந்தால் நீங்கள் தப்பிக்கும் வாய்ப்பு அரியதாகி விடும் என்கிறார்கள் வல்லுனர்கள்.

Next Post

போர் விளையாட்டு ஆரம்பம்! பீரங்கி படை தாக்குதல் நடத்திய தென்கொரியா-அமெரிக்கா: பரபரப்பு வீடியோ

Next Post
போர் விளையாட்டு ஆரம்பம்! பீரங்கி படை தாக்குதல் நடத்திய தென்கொரியா-அமெரிக்கா: பரபரப்பு வீடியோ

போர் விளையாட்டு ஆரம்பம்! பீரங்கி படை தாக்குதல் நடத்திய தென்கொரியா-அமெரிக்கா: பரபரப்பு வீடியோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures