நாட்டில் நிலவும் அதிக மழையுடனான காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோய் பரவக்கூடிய வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.
எனவே, இது தொடர்பில் பொலிஸாரின் தலைமையில் விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இதன்போது பொது நிர்வாக அமைச்சு, கொழும்பு மாநகரசபை, சிவில் பாதுகாப்பு திணைக்களம், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் இராணுவத்தினர் இணைந்து ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று சுற்றுச்சூழலை பரிசோதித்தல், விழிப்புணர்வூட்டுதல், துண்டுப்பிரசுரங்களை கையளித்தல், ட்ரோன் கெமராக்களை பயன்படுத்தி சூழலை கண்காணித்தல் மற்றும் நுளம்புக்கொல்லி புகை பிரயோகம் உள்ளிட்ட செயற்றிட்டங்களை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு நாளை சனிக்கிழமை (நவ 5) காலை 7.30க்கு கெப்பெட்டிபொல மாவத்தையில் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.