Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொருளாதார ரீதியாக சீனாதான் முக்கியமான நாடாக இருக்கும்

April 16, 2020
in News, Politics, World
0

கொரோனாவிற்கு பின்பாக உலகம் முழுக்க பொருளாதார ரீதியாக சீனாதான் முக்கியமான நாடாக இருக்கும், அமெரிக்கா தன்னுடைய ஸ்தானத்தை சீனாவிடம் இழக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

உலகமே அழிய போகிறது.. கடலில் இருந்து பெரிய சுனாமி வர போகிறது.. இப்போது இதில் இருந்து தப்பிக்க பெரிய கப்பல் கட்ட வேண்டும்.

வேகமாக கட்ட வேண்டும். அப்போது உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து அணுகியது ஒரு நாட்டைதான்.. அது சீனா. சீனர்களிடம் விட்டுவிடுங்கள், அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.. இந்த வசனமும் காட்சியும் இடம்பெற்று இருக்கும் படம் பிரபல ஹாலிவுட் படமான 2012.

அதாவது உலகமே அழியும் நிலையில் இருக்கும் போது வல்லரசு நாடுகள் சீனர்களின் உதவியை நாடி செல்வதாக இதில் காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். தற்போது அந்த காட்சி ஏறத்தாழ உண்மையாகிவிட்டது.

உலகம் முழுக்க கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளது. உலகின் வல்லரசு நாடுகள் என்று கருதப்படும் அமெரிக்கா, ரஷ்யா தொடங்கி வளரும் நாடுகளான இந்தியா வரை எல்லா நாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் முதலில் பாதிக்கப்பட்ட சீனா தற்போது அதில் இருந்து மீண்டு வந்து உற்பத்தியை தொடங்கி உள்ளது. உலக நாடுகள் அனைத்திற்கும் சீனா ஏற்றுமதியை தொடங்கி உள்ளது.

சீனா இப்போது மட்டுமல்ல கொரோனா காலத்திற்கு முன்பாகவே உலகின் முன்னணி ஏற்றுமதி நாடாக மாறி இருந்தது.

உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும் சீனாவின் பொருட்கள்தான் கோலோட்சியது. உதாரணமாக சீனாவின் வர்த்தக மதிப்பு 4.43 டிரில்லியன் டொலர். அமெரிக்காவின் வர்த்தக மதிப்பு 3.89 டிரில்லியன் டொலர்தான். உலகம் முழுக்க பொருட்களை ஏற்றுமதி செய்வது தொடங்கி உணவு, கட்டுமான துறை ஆகியவற்றிலும் சீனா தான் நம்பர் 1 நாடாக இருக்கிறது.

சீனா, ஜெர்மனி அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகள் உடன் மட்டும் வர்த்தகம் செய்யவில்லை. ஏழை நாடுகளாக கருதப்படும் ஆபிரிக்க நாடுகள் உடனும் வர்த்தகம் செய்கிறது.இலங்கையின் அசாத்திய வளர்ச்சிக்கு சீனாவின் உதவிதான் காரணம். ஆசியாவில் இருக்கும் சிறிய சிறிய நாடுகளின் வளர்ச்சியில் சீனா மிகப்பெரிய பங்கு வகித்து உள்ளது. இப்படி சீனா ஏற்கனவே பல சிறிய சிறிய நாடுகளை தங்கள் பாக்கெட்டிற்குள் போட்டுக்கொண்டது.

சிறிய நாடுகளுக்கு உதவி செய்வது அவர்களின் நன்மதிப்பை பெற்றது மட்டுமின்றி இன்னொரு பக்கம் உலகம் முழுக்க எல்லா நாட்டு சந்தையையும் சீனா பிடித்துவிட்டது. இதனால் அமெரிக்கா கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய மதிப்பை உலக நாடுகளிடம் இழக்க தொடங்கியது.

இந்த கோபத்தில்தான் அதிபர் டிரம்ப் சென்ற வருடம் சீனாவுடன் வர்த்தக போரில் ஈடுபட்டார். அதில் அமெரிக்காவின் கோரிக்கை ஏற்கப்பட்டது. அதாவது அமெரிக்காவின் பொருட்களை அதிக விலைக்கு வாங்குவதாக சீனா ஒப்புக்கொண்டது.

ஆனால் கொரோனாவிற்கு பின் அந்த வர்த்தக போர் ஒப்பந்தம் எல்லாம் ஒன்றுமில்லாமல் போய் உள்ளது. இப்போது உலகம் முழுக்க சீனா வைப்பதுதான் சட்டம் என்ற நிலை ஏறத்தாழ வந்துவிட்டது. அமெரிக்கா முழுக்க மருந்து பொருட்களுக்கு சீனாவை நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சீனா அனுப்பும் மாஸ்க், வெண்டிலேட்டர் உள்ளிட்ட சாதனங்களை நம்பும் நிலைக்கு அமெரிக்கா சென்றுள்ளது. இதற்காக சீனா சொல்வதை எல்லாம் கேட்கும் நிலைக்கு அமெரிக்கா சென்றுள்ளது.

அமெரிக்காவிற்கு மட்டுமல்ல உலகின் பல முக்கியமான நாடுகளுக்கு சீனா உதவி வருகிறது. அவுஸ்ரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ் , இத்தாலி, ஸ்பெயின், பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, அரபு நாடுகள், இந்தியா, இலண்டன் என்று பல நாடுகளுக்கு சீனா தங்கள் மருந்து பொருட்களை அனுப்பி உள்ளது. சீனாவில் ஏற்றுமதி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ”வாவ் ” என்று சொல்லும் அளவிற்கு 300% அதிகரித்து உள்ளது. வரும் நாட்களில் இது மேலும் வேகமாக அதிகரிக்கும் என்கிறார்கள்.

அதேபோல் இன்னொரு பக்கம் வியட்நாம் உலகம் முழுக்க இருக்கும் சில நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு மருந்துகளை வியட்நாம் ஏற்றுமதி செய்து வருகிறது. அதோடு, கியூபா மருந்து பொருட்களை இலத்தீன் அமெரிக்கா நாடுகளுக்கும், அமெரிக்காவிற்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. சீனாவை தவிர இந்தியா, கியூபா, வியட்நாம் ஆகிய நாடுகள்தான் அதிக ஏற்றுமதி செய்கிறது.

ஆனால் அமெரிக்காவிற்கு நெருக்கமாக இருக்கும் நாடுகளுக்கு தற்போது சீனாவை நம்பி இருப்பதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எப்போதும் உலக நாடுகளில் பெரிய அளவில் பிரச்சனை வந்தால் அதில் அமெரிக்காதான் மூக்கை நுழைக்கும். ஆனால் இந்த முறை அமெரிக்காவிற்கே பெரிய பிரச்சனை வந்துள்ளது. இதனால் உலக நாடுகள் சீனாவை தவிர வேறு யாரையும் நம்ப முடியாத நிலைக்கு சென்றுள்ளது. இங்குதான் அமெரிக்காவை ”பிக்பாஸ்” சீட்டில் இருந்து இறக்கிவிட்டுவிட்டு சீனா அங்கு அமர்ந்துள்ளது.

இன்னொரு பக்கம் அமெரிக்காவும் உலக நாடுகள் உடன் மருந்து பொருட்களுக்காக சண்டை போட தொடங்கி உள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரம் மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது, அடுத்த வருடம் முழுக்க இந்த சரிவு தொடரும் என்று கூறுகிறார்கள். நிலைமை இப்படி இருக்க உலக சுகாதார மையம் உடன் சண்டை போடுவது என்று அமெரிக்கா தவறான முடிவுகளை எடுத்து வருகிறது. உலக நாடுகள் இடையே இதனால் அமெரிக்கா கெட்ட பெயர் எடுக்க தொடங்கி இருக்கிறது.

அதே போல அமெரிக்கா தனது நட்பு நாடுகளான இலண்டன் , ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா ஆகிய நாடுகளுக்கு செல்லும் மருந்துகளை அடித்து பிடுங்க தொடங்கி உள்ளது. இதனால் அமெரிக்காவின் நட்பு நாடுகள் எல்லாம் அந்நாட்டின் மீது கடுமையான கோபத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு இவர்களுக்கு சீனா உதவி வருகிறது. இதனால் இந்த நாடுகள் அமெரிக்காவை உதறிவிட்டு சீனாவின் கரம் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனாவிற்கு பின் அதில் இருந்து மீண்டு வர அமெரிக்காவிற்கு சில மாதங்கள் எடுக்கும். அது உலக நாடுகளுக்கு ஏற்றுமதியை தொடங்க சில மாதங்கள் ஆகும். ஆனால் அதற்குள் சீனா உலக நாடுகளை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடும் என்று கூறுகிறார்கள். இப்போதே அதற்கான செயல்பாடுகள் வந்துவிட்டது. இன்னும் சில மாதங்களில் உலகின் பிக்பாஸ் ஆக டிராகன் தேசம் சீனா மாறும் என்கிறார்கள்.

Previous Post

கொரோனா வைரஸை வெற்றிகரமாக எதிர்கொண்ட பட்டியலில் இலங்கை!

Next Post

15 மாவட்டங்களில் ‘கொரோனா’ கொழும்பில் 49 பேருக்கு தொற்று

Next Post

15 மாவட்டங்களில் 'கொரோனா' கொழும்பில் 49 பேருக்கு தொற்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

July 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 17, 2026
அபிவிருத்தியின் போர்வையில் இன அழிப்பு தொடர்கிறது – அருட்தந்தை சத்திவேல்

தமிழர்களின் பிரச்சினைக்காக கூட்டமைக்கின்றோம் என்பதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கிறது – அருட்தந்தை மா.சத்திவேல்

July 17, 2026

Recent News

நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

July 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 17, 2026
அபிவிருத்தியின் போர்வையில் இன அழிப்பு தொடர்கிறது – அருட்தந்தை சத்திவேல்

தமிழர்களின் பிரச்சினைக்காக கூட்டமைக்கின்றோம் என்பதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கிறது – அருட்தந்தை மா.சத்திவேல்

July 17, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures