கண்டி பிரதேசத்தை சேர்ந்த பெண் உட்பட மூன்று பேர் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சன நெரிசல் அதிகம் இருக்குமிடங்களில் பொது மக்களை ஏமாற்றி சிம் அட்டைகளை விற்பனை செய்து வந்தவர்களை பொலிஸார் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இதனை அடுத்து இம் மூவரும் தலா 2 லட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டனர். அத்தோடு ஏப்ரல் 2 ஆம் திகரி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் 20 – 25 வயதுக்கி டைப்பட்டவர்களாவர் என்றும் இவர்களின் இளைஞர்கள் இருவரும் கண்டி – தம்பேவல எனும் இடத்தையும் யுவதி கெக்கிராவ எனும் இடத்தையும் சேர்ந்தவர்களாவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இவர்களால் நாளாந்த வாடகைக்காக பயன்படுத்திய கார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.













