பூதாகரமாக வெடித்த ஜல்லிக்கட்டு பிரச்னை… வெட்ட வெளிச்சமாகிய விஷாலின் உண்மை முகம்!..
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்றிலிருந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு ஜல்லிகட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
விடிய, விடிய போராட்டம் தொடர்ந்தால் பொலிஸ் அதிகாரிகள் பெண்கள், சிறுவர்கள் உட்பட இளைஞர்களை கைது செய்து மண்டபங்களில் அடைத்து வைத்துள்ளனர். இந்நிலையில் இவர்களை விடுவிக்க கோரி அலங்காநல்லூர் ஊர் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சேலத்தில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டுள்ளார். சென்னை மெரினாவிலும் அலங்காநல்லூர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் மக்கள் திரண்டு வருகின்றனர்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு
சென்னை மெரினாவில் போராடி வரும் மாணவர்கள், இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.
ஆனால் அங்கு போராட்டம் நடத்தி வருபவர்கள் எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்க வேண்டாம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இன்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் வருகையை கூட அனுமதிக்காமல் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முதியவர் தற்கொலை மிரட்டல்
அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்க கோரியும், பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக வெளியேற கோரியும் முதியவர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இவ்வாறு ஆங்காங்கே நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில் விஷால் அன்று ஜல்லிக்கட்டு பற்றியும், இன்று அவரது கருத்து என்ன என்பதை வெட்டவெளிச்சமாக்கிய காட்சி இணையத்தில் தீயாய் பரவிவருகின்றது.