Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

புற்றுநோயின் கொடூர முகம் இதுதான்: தந்தை வெளியிட்ட மகளின் நெஞ்சை உலுக்கும் புகைப்படம்

November 3, 2016
in News
0
புற்றுநோயின் கொடூர முகம் இதுதான்: தந்தை வெளியிட்ட மகளின் நெஞ்சை உலுக்கும் புகைப்படம்

புற்றுநோயின் கொடூர முகம் இதுதான்: தந்தை வெளியிட்ட மகளின் நெஞ்சை உலுக்கும் புகைப்படம்

பிரித்தானியாவில் புற்றுநோயினால் கடுமையாக பாதிப்புக்குள்ளான தனது மகளின் நெஞ்சை உலுக்கும் புகைப்படத்தை அவரின் தந்தை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் லங்காஷயர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் Andy Whelan. இவரது மகளான சிறுமி ஜெசிகா அதி தீவிரமான ஒரு வகை புற்றுநோயால் கடந்த 13 மாதங்களாக போராடி வருகிறார்.

இந்த நிலையில் புற்றுநோயின் தீவிர கட்டத்தில் இருக்கும் சிறுமி ஜெசிகா அடுத்த ஒரு வாரம் மட்டுமே உயிரோடு இருப்பார் என்ற கொடூரமான செய்தியை மருத்துவர்கள் சிறுமியின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தமது மகளுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருந்து வரும் ஆண்டி வீலன், சிறுமி ஜெசிகாவின் புகைப்படம் ஒன்றை தமது சமூகவலைதள பக்கத்தில் பதிவேற்றி, சிறுமியின் நோய் குறித்த தீவிரத்தையும் விளக்கமாக பதிவிட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் கறுப்பு வெள்ளை புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதுவரையான வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு கொடிய தருணத்தை தாம் புகைப்படமாக பதிவு செய்ததில்லை என்ற வார்த்தைகளுடன் ஆண்டி வீலன் அந்த புகைப்படத்தையும் தமது மகளின் நிலையையும் விளக்கியுள்ளார்.

கடுமையான வலியால் துடிதுடிக்கும் ஜெசிகா தங்களை அவரது அருகே இருந்து ஆறுதல் படுத்த அனுமதிப்பதில்லை எனவும். மொத்த துயரத்தையும் அவரே தாங்கிக்கொண்டு எங்களை வெறும் பார்வையாளர் ஆக்குகின்றார் என ஆண்டி தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜெசிகா இனி உயிருடன் இருப்பது கொஞ்ச நாளே என்பதால் தற்போது அவர் விரும்பியபடி நடந்துகொள்ள அனுமதித்திருப்பதாக ஆண்டி தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக ஜெசிக்காவுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் எவ்வித மாற்றமும் காணாததை அடுத்தே மருத்துவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

இதனிடையே ஆண்டியின் சமூகவலைதள பதிவினை பார்த்து கலக்கமுற்ற One Direction குழுவின் பாடகர் Harry Styles சிறுமி ஜெசிகாவுடன் பேச வேண்டும் என்ற ஆவலை தெரிவித்துள்ளாராம்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Tags: Featured
Previous Post

ராகுல் காந்தி அதிரடி கைது..!

Next Post

குழந்தைகளுக்கு போதை மருந்து கொடுத்து கொடுமை செய்த பெற்றோர்

Next Post

குழந்தைகளுக்கு போதை மருந்து கொடுத்து கொடுமை செய்த பெற்றோர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures