புர்க்கினா பாசோவின் சன்மடெங்கா மாகாணத்தில் உள்ள யர்கோ இராணுவ முகாம் மீது திங்களன்று தீவிரவாதிகளால் நடத்திய தாக்குதலில் குறைந்தது 14 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஏழு பேர் காயமடைந்துள்னர்.
உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஏராளமான ஆயுததாரிகளால் படையினரை குறிவைத்து தாக்கியுள்ளனர் என்று அந் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் எய்ம் பார்தெலெமி சிம்போர் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பதிலுக்கு அரசாங்கம் உடனடியாக வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை முன்னெடுத்தது. தாக்குதலை கண்டு அதிர்ச்சியடைந்தாக உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]