முச்சக்கர வண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதுண்டதில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். நீர் கொழும்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதுண்டு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இரு ஆண்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் பலியான இரு பெண்களினதும் சடலம் நீர் கொழும்பு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் இருவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.