6.2அளவிலான நிலநடுக்கம் யுகொன் பகுதியில் ஏற்பட்டுள்ளது. உள்ஊர் நேரப்படி அதிகாலை 5.30மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மின்சார துண்டிப்பு மற்றும் அதிர்வு மக்களை எழுப்பியுள்ளது.
அலாஸ்காவிலிருந்து 85மைல்கள் தொலைவில் பிரிட்டிஷ் கொலம்பிளா/யுகோன் எல்லையில் நில நடுக்கம் ஏற்பட்டது.
வைற் கோசை சேர்ந்த அதிகமான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். மக்கள் கட்டில்களில் இருந்து விழுந்துள்ளனர் எனவும் பொருட்கள் உருண்டு விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தாக்கம் பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடபகுதியிலும் உணரப்பட்டுள்ளது.