Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரபாகரனை விட விக்னேஸ்வரன் ஆபத்தானவர்: அச்சத்தில் தென்னிலங்கை

February 20, 2017
in News
0
பிரபாகரனை விட விக்னேஸ்வரன் ஆபத்தானவர்: அச்சத்தில் தென்னிலங்கை

பிரபாகரனை விட விக்னேஸ்வரன் ஆபத்தானவர்: அச்சத்தில் தென்னிலங்கை

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் செயற்பாடுகளை பார்க்கிலும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் ஆபத்தானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விடுதலைப் புலிகள் அமைப்பை விடவும் தமிழ் மக்கள் பேரைவை மிகவும் ஆபத்தானது என பொது பலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கவீனமுற்ற இராணுவத்தினருக்கு ஆசி வழங்கிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வடக்கில் அரசாங்கத்தின் ஆட்சி நடைபெறவில்லை. வடக்கில் சிங்கள மக்கள் வாழ்வதற்கான உரிமை இல்லாமல்போயுள்ளது.

பிரதமர் மற்றும் ஜனாதிபதி காரியாலயத்தில் இருந்து அனுப்பும் சிங்கள மொழியிலான கடிதங்களைக் கூட குப்பைத்தொட்டிக்குள் போடும் நிலைமை வடக்கில் காணப்படுகின்றது.

கிளிநொச்சி உள்ளிட்ட இடங்களில் வாழ்ந்த சிங்கள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். புலம்பெயர் தமிழ் மக்கள் சர்வதேச ரீதியில் அவர்களது பிரிவினைவாதத்தை வெற்றிகொள்ள செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், புலம்பெயர் அமைப்புக்களின் செயற்பாட்டின் அடிப்படையிலேயே வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்படுகின்றார்.

அந்த வகையில், அவரால் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையும் பயங்கரமானது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் செயற்பாடுகளை விட விக்னேஸ்வரனின் இந்த அரசியல் முன்னணி மிகவும் பயங்கரமானது.

எவ்வாறாயினும், பிரபாகரன் இருந்த காலத்தில் எமக்கான அச்சுறுத்தல் என்னவென்று தெரிந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

கனடாவை அதிர வைத்த 3 கொலைகள்

Next Post

இலங்கையில் இடம்பெற்ற படகு விபத்தில் 11 பேர் பலி..

Next Post
இலங்கையில் இடம்பெற்ற படகு விபத்தில் 11 பேர் பலி..

இலங்கையில் இடம்பெற்ற படகு விபத்தில் 11 பேர் பலி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures