Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரதமர் பயன்படுத்திய ஜெட் விமானம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி பல கேள்விகள்

January 1, 2022
in News, Sri Lanka News
0
மகிந்த பயணித்த விமானம் யாருடையது? | திருப்பதி விஜயத்தால் ஏற்பட்டுள்ள சர்ச்சை

அண்மையில் பிரதமர் திருப்பதிக்குச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட ஜெட் விமானம் பரிசாகக் கிடைத்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கும் நிலையில், குறித்த ஜெட் விமானம் பரிசாகக் கிடைத்ததா? அல்லது திருப்பதிக்கான ஜெட் விமானப்பயணம் மாத்திரம் பரிசாகக் கிடைத்ததா? குறித்த ஜெட் விமானம் தூதுவர் கனநாதனுக்குச் சொந்தமானதா? ஆமெனில் அதனைக் கொள்வனவு செய்வதற்கான நிதி எவ்வாறு கிடைத்தது? ஆகிய விடயங்கள் தொடர்பில் உரியவாறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.

Jet for PM's Tirupati visit, was given for free - Yoshitha - Times News  Express

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இரசாயன உர இறக்குமதித்தடையினால் விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, சமையல் எரிவாயு சிலிண்டர் சார் வெடிப்பு சம்பவங்கள், அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு, பொருட்களுக்கான விலையேற்றத்தினால் வாழ்க்கைச்செலவு உயர்வு, பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளடங்கலாக பொதுமக்கள் மிகமோசமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்த 2021 ஆம் வருடம் தற்போது முடிவிற்கு வந்திருக்கின்றது.

ஆனால் இந்த நெருக்கடிகளின் அடுத்தகட்ட விளைவுகள் பற்றிய அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி தோல்வியடைந்திருப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் கடந்த வருடம் ‘சேர் பெயில்’ என்று கூறினோம். ஆனால் இவ்வருட முடிவில் தனது செயலாளர், ஏனைய அரச கட்டமைப்புக்கள் மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகள் தோல்வியடைந்திருப்பதாக ஜனாதிபதியே கூறத்தொடங்கியிருக்கின்றார்.

ஆகவே ஜனாதிபதியின் தோல்வியே ஏனைய அதிகாரிகளின் தோல்விக்குக் காரணமாக அமைந்திருக்கின்றது.

தனியார் ஜெட் விமானத்தில் பிரதமர் திருப்பதிக்குச் சென்ற வருடம் என்ற அடிப்படையிலும் 2021 முக்கியத்துவம் பெறுகின்றது. பொதுவாக புதிய கார் அல்லது ஏதேனும் வாகனங்களை வாங்கினால் கதிர்காமத்திற்குச் செல்வது வழமையாக நடைபெறும் விடயமாகும். இருப்பினும் சிலர் அவர்களது இயலுமைக்கு ஏற்றவாறு திருப்பதிக்கும் சென்றுவருவார்கள்.

ஏனெனில் இந்த ஜெட் விமானம் சென் மெரினோ இராச்சியத்தில் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தாலிக்கு அண்மையிலுள்ள இந்த நாட்டில் பணத்தை இரகசியமாக மறைத்து வைக்கமுடியும் என்பதுடன் கடந்த காலங்களில் சிலர் இத்தாலிக்குச்சென்று திரும்பும்போது சென் மெரினோ இராச்சியத்திற்கும் சென்று வந்ததாக எமக்கு அறியக்கிடைத்தது.

ஆனால் இந்த ஜெட் விமானம் உகண்டாவின் தூதுவராக இருந்த கனநாதன் என்ற நபரின் ஊடாகவே நாட்டை வந்தடைந்திருக்கின்றது. இது பரிசாகக் கிடைத்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கும் நிலையில், குறித்த ஜெட் விமானம் பரிசாகக் கிடைத்ததா? அல்லது திருப்பதிக்கான ஜெட் விமானப்பயணம் மாத்திரம் பரிசாகக் கிடைத்ததா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதுமாத்திரமன்றி குறித்த தூதுவருக்கு எவ்வாறு ஜெட் விமானம் கிடைத்தது? இது அவருக்குச் சொந்தமானது என்றால், அதற்கான நிதி எவ்வாறு கிடைத்தது? இவை தொடர்பில் உரியவாறு விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமாகும்.

இது இவ்வாறிருக்கையில், நாடு நெருக்கடியில் இருப்பதால் டுபாய் விஜயத்தை இரத்துச்செய்வதாகப் பிரதமர் கூறுகின்றார். அவ்வாறெனின் திருப்பதி விஜயத்தின்போது அதனை அவர் உணரவில்லையா?

அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகளால் நாட்டுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்ற சூழ்நிலையில் நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களைப் பார்த்து ‘இப்போது சுகமா?’ என்று கேட்கமாட்டோம்.

மாறாக கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் மக்களின் பிரச்சினைகளுக்கு அவசியமான தீர்வைப் பெற்றுக்கொடுத்து, நாட்டை மீட்டெடுப்பதற்கு அவசியமான தெளிவான வேலைத்திட்டத்துடன் 2022 ஆம் ஆண்டை எதிர்கொள்வதற்குத் தயாராக இருக்கின்றோம்.

அதுமாத்திரமன்றி நாட்டின் ஆட்சிமாற்றமொன்றை முன்னிறுத்தி மக்களனைவரும் ஒன்றிணையும்போது அதற்கு நாம் உரியவாறான தலைமைத்துவத்தை வழங்குவோம் என்றும் குறிப்பிட்டார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

வலிமை படத்தின் அடுத்த அப்டேட்

Next Post

ஒமிக்ரோன் தொற்று குறித்த அச்சம் தேவையற்றது | மருத்துவ நிபுணர்கள் விளக்கம்

Next Post
ஒமிக்ரோன் தொற்று குறித்த அச்சம் தேவையற்றது | மருத்துவ நிபுணர்கள் விளக்கம்

ஒமிக்ரோன் தொற்று குறித்த அச்சம் தேவையற்றது | மருத்துவ நிபுணர்கள் விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026
விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

June 25, 2026
அரசு பிடிவாதத்தைக் கைவிட்டு மக்களின் வாழ்வியல் உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும் – சுரேஷ்

வவு­னியா மேயர், சாவகச்சேரி உதவித் தவிசாளர் ஆகியோரை பதவி நீக்கியமைக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்

June 25, 2026

Recent News

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026
விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

June 25, 2026
அரசு பிடிவாதத்தைக் கைவிட்டு மக்களின் வாழ்வியல் உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும் – சுரேஷ்

வவு­னியா மேயர், சாவகச்சேரி உதவித் தவிசாளர் ஆகியோரை பதவி நீக்கியமைக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்

June 25, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures