தனக்கும் பிரதமருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளதாகவும் அதில் எந்த உண்மையும் கிடையாது எனவும் அமைச்சர் ரவுப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
எமக்கிடையில் எவ்வித முரண்பாடும் கிடையாது எனவும் எதிர்காலத்திலும் அவருடன் இணைந்து புதிய அரசாங்கத்தை உருவாக்கவுள்ளதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நாங்கள் எதிர்பார்க்கும் ஜனாதிபதி வேட்பாளரை அடுத்தவாரத்திற்குள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்து, இந்த தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள உதவுவாரென நம்புகிறோம்.
எனக்கும் பிரதமருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இதில் எந்த உண்மையும் கிடையாது. அது அவருக்கும் நன்கு தெரியும். அரசாங்கத்தில் எங்களுக்குள் வாதப்பிரதிவாதங்கள் நடப்பது சகஜமானது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.