Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரதமருடனான சந்திப்பில் அரசியல் பேசவில்லை: ஓபிஎஸ் மறுப்பு

October 12, 2017
in News, Politics, World
0
பிரதமருடனான சந்திப்பில் அரசியல் பேசவில்லை: ஓபிஎஸ் மறுப்பு

டெல்லியில் பிரதமரை சந்தித்தபோது தமிழக அரசின் திட்டங்கள் குறித்து மட்டுமே பேசினேன் அரசியல் பற்றி பேசவில்லை என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுக அணிகள் இணைந்த பிறகு துணை முதல்வராக பொறுப்பேற்ற ஓபிஎஸ் முதன் முறையாக பிரதமர் மோடியை இன்று சந்தித்தார். ஏற்கனவே பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு கிடைக்காத நிலையில் இன்று காலை 11 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டதை அடுத்து பிரதமரை ஓபிஎஸ் சந்தித்தார்.

மின்துறை அமைச்சர் தங்கமணி, மைத்ரேயன், செம்மலை, கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் அவருடன் டெல்லி சென்றனர். இருப்பினும், தங்கமணி இல்லாமல் தனது ஆதரவாளர்களுடன் பிரதமரை ஓபிஎஸ் தனியாக சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓபிஎஸ் கூறியதாவது:

பிரதமரை எதற்காக சந்தித்தீர்கள்?

துணை முதல்வரான பின்னர் பிரதமரை முதல்முறையாக சந்திக்கிறேன். வாழ்த்து தெரிவித்தார். பின்னர் தமிழகத்தின் மின் தேவைக்கான நிலக்கரியை ஒதுக்கித்தரும்படி கேட்டுக்கொண்டேன். தருவதாக உறுதி அளித்துள்ளார். வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் இலக்கு 10 லட்சம் வீடுகள். அதுபற்றி கோரிக்கை வைத்தோம். தற்போது 3 லட்சம் வீடுகள் கட்டும் பணிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நிதி ஒதுக்கப்படும் என்று பிரதமர் கூறினார்.

மின் திட்டம் பற்றி பேசச்செல்லும் போது மின் துறை அமைச்சரை அழைத்துச்செல்லாமல் தனியே சென்றது ஏன்?

அப்படி ஒன்றும் இல்லை. மின் துறை அமைச்சர் மதியம் 2 மணிக்கு பிரதமரை சந்திக்க உள்ளார்.

தனிப்பட்ட முறையில் சந்தித்து உங்கள் குறைகளை சொன்னதாகக் கூறப்படுகிறதே?

எந்த குறையும் இல்லை. அரசு சம்பந்தமான விஷயங்களை பற்றி மட்டுமே பேசினோம்.

நீங்கள் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்த போது பேசப்பட்ட விஷயங்கள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறுகிறார்களே?

எந்தவித நிபந்தனையும் இன்றித்தான் நாங்கள் இணைந்தோம்.

இணைந்த பின்னர் என்ன விளைவு உண்டாகியுள்ளது?

நாங்கள் என்ன நோக்கத்திற்காக ஒன்று பட்டோமோ அது நிறைவேறி உள்ளது. எம்ஜிஆருடன், ஜெயலலிதாவுடன் இணைந்து செயல்பட்டபோது என்ன மன நிலையில் இருந்தோமோ அதே மன நிலையில் தான் உள்ளோம்.

பிரதமரை சந்தித்து உங்கள் பிரச்சினைகளைத்தான் சொன்னீர்கள் என்கிறார்களே?

இல்லவே இல்லை அவரிடம் டெங்கு பிரச்சினை தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக சொன்னேன். மத்திய அரசின் மருத்துவக்குழுவை அனுப்புவதாக பிரதமர் கூறினார்.

உள்ளாட்சி தேர்தல் நடக்காதது தான் டெங்கு பிரச்சினைக்கு காரணம் என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளாரே?

உள்ளாட்சி தேர்தலுக்கும் டெங்கு பரவுவதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது?!

கட்சி அணிகள் இணைந்த பிறகும் கட்சியில், ஆட்சியில் உள்ள உங்கள் ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்படுவதாக கூறப்படுகிறதே?

சிறிதும் இல்லை.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக செயல்படுவதாக கூறுகிறார்களே?

அப்படி ஒன்றும் இல்லை, என்னிடமும், அனைத்து அமைச்சர்களையும் கலந்து பேசித்தான் எந்த முடிவையும் முதல்வர் எடுக்கிறார்.

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்தார்.

Previous Post

மனைவியுடன் சென்ற எஸ்.பி-யை நள்ளிரவில் மிரட்டிய மர்மக் கும்பல்!

Next Post

சபாநாயகரை மிரட்டுவதா? – தினகரன் மீது 2 புகார்!

Next Post
சபாநாயகரை மிரட்டுவதா? – தினகரன் மீது 2 புகார்!

சபாநாயகரை மிரட்டுவதா? - தினகரன் மீது 2 புகார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026

Recent News

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures