Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாவங்களை போக்கும் ‘கைசிக ஏகாதசி’ விரதம்

December 22, 2021
in News, ஆன்மீகம்
0
பாவங்களை போக்கும் ‘கைசிக ஏகாதசி’ விரதம்

இவ்விரத முறையை மேற்கொள்வதால் வாழ்வின் பதினாறு செல்வங்கள் கிடைக்கும். தொடர்ந்து 12 ஆண்டுகள் இவ்விரத முறையை பின்பற்றுவதால் வாழ்வில் பெரும்பேறும், முக்தியும் கிடைக்கும்.

கைசிக ஏகாதசி விரதமுறையைப் பின்பற்றுவதால் உயர்ந்த நன்மைகள் கிடைக்கும். பூலோகத்தில் சொர்க்க வாழ்வு கிடைக்கும். கார்த்திகை மாதம் அனங்க திரயோதசி தினத்தன்று ரதி-மன் மதனை வழிபட்டால் திருமணம் விரைவில் நடக்கும்.

கார்த்திகை முதல் ஞாயிறு அன்று தொடங்கப்பட்டு தொடர்ந்து பன்னிரெண்டு வாரங்கள் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. நவகிரகங்கள் இவ்விரதத்தை மேற்கொண்டே வரம் பெற்றனர். எனவே இவ்விரத முறையை கடைப்பிடிப்பதால் நவகிரகப் பாதிப்புகள் நீங்கி இறைவனின் அருள் கிடைக்கும். கார்த்திகை ஞாயிறு மிகவும் போற்றப்படுகிறது.

கார்த்திகை விரதம் என்பது முருகப்பெருமானை குறித்து கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்திலும் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையில் பகலில் உணவு உண்ணாமல் இறைவழிபாடு செய்து வர வேண்டும். இவ்விரத முறையை மேற்கொள்வதால் வாழ்வின் பதினாறு செல்வங்கள் கிடைக்கும். தொடர்ந்து 12 ஆண்டுகள் இவ்விரத முறையை பின்பற்றுவதால் வாழ்வில் பெரும்பேறும், முக்தியும் கிடைக்கும்.

கைசிக ஏகாதசி விரதமிருந்தால் காசியில் கங்கையில் குளித்த பலனைக் காட்டிலும், நைமிஷாரண்ய காட்டில் குளித்ததை விடவும், புஷ்கரணியில் குளித்ததை விடவும் பலன் அதிகம். கைசிக ஏகாதசியை பற்றி கேட்பவர்களுக்கு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். சாளக்ராமக் கற்கள் அதிகமாக கிடைக்கும் கெண்டகி நதியில் குளித்த பலன் மற்றும் கோதாவரி நதியில் திங்கட்கிழமை வரும் பவுர்ணமி அன்று குரு பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரிக்கும் போது குளிக்கும் பலனை விட அதிகமாக கைசிக ஏகாதசி விரத பலன் தரும்.

கைசிக விரதம் இருப்பவர்களுக்கு இமய மலையில் கேதாரநாதரை தரிசித்த பலனை விட அதிகம் கிடைக்கும். குருக்ஷேத்திரத்தில் சூரிய கிரகணம் அன்று குளித்த பலனை விட அதிகம் பெறலாம். வேத சாஸ்திரங்களை படிப்பதை காட்டிலும் பலன் வாய்ந்தது. இந்த பூமியை அதன் காடுகள் சமுத்திரங்களோடு தானம் கொடுத்ததற்கு ஒப்பானது.

இந்த ஏகாதசி விரதமிருந்தால் எதிர்காலத்தில் பிறப்பின்றி வைகுண்டம் சேரலாம். முந்தைய ஜென்மங்களின் பாவ சுமையிலிருந்து விடுபடலாம். கைசிக ஏகாதசி விரதமிருப்போரை எமராஜனும் சித்திரகுப்தரும் அண்ட மாட்டார்கள். கைசிக ஏகாதசி அன்று ஒரு துளசி இலை கொண்டு விஷ்ணுவை வணங்குவது நவரத்தினங்களை பகவானுக்கு சமர்ப்பிப்பதை காட்டிலும் உத்தமமானது.

அன்றைய தினம் நெய் விளக்கு ஏற்றி ஸ்ரீஹரியை வணங்கினால் மூதாதையர்கள் சொர்க்கத்திற்கு முன்னேறுவார்கள். கைசிக ஏகாதசி அன்று துளசி தாயை வணங்குபவர்கள் தங்கள் பாவங்களில் இருந்து விடு படுவார்கள். கைசிக ஏகாதசி விரதமிருப்போரை தேவர்களும், நாகர்களும் போற்றுவார்கள். அன்றைய தினம் விரதமிருந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பவர்களுக்கு ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கி அனைத்து நற்பலனும் கிடைப்பதோடு புத்திர தோஷமும் நீங்கும்.

கார்த்திகை மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி இறைவனை வழிபட்டால் எல்லா பாவங்களும் விலகும். இப்படி நீராடுவதை, கார்த்திகை நீராடல் என்று கூறுவார்கள். ஸ்ரீவாஞ்சியம் என்ற தலத்தில் அமைந்துள்ள திருக்குளம் குப்தகங்கை என அழைக்கப்படுகிறது. கங்கையானவள் 999 பாகம் ரகசியமாக இந்த குப்தகங்கையில் வசிக்கிறாள். மீதி ஒரு பாகம்தான் காசியில் உள்ள கங்கையில் உள்ளாள். எனவே காசியை விட இங்குள்ள கங்கைக்கே பெருமை அதிகம் என்பர்.

கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்மஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள். கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இரு வேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

வறுமையை போக்கும் கருமாரியம்மன் 108 போற்றி

Next Post

தக்காளியில் பஜ்ஜி செய்வது இப்படித்தான்

Next Post
தக்காளியில் பஜ்ஜி  செய்வது இப்படித்தான்

தக்காளியில் பஜ்ஜி செய்வது இப்படித்தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

சர்வஜன வாக்கெடுப்பு குறித்து நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் | அமைச்சர் சுசில் ரணசிங்க

August 27, 2026
சிறார்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் பாதுகாக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் பேரணியும் மாநாடும் முன்னெடுப்பு

சிறார்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் பாதுகாக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் பேரணியும் மாநாடும் முன்னெடுப்பு

August 27, 2026
செம்மணி புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – பிமல் உறுதி

செம்மணி புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – பிமல் உறுதி

August 27, 2026
தேநீர் இடைவேளையின்போது இலங்கை 383 – 8 விக்.; சொனால் தினூஷ 98 ஆ.இ.

தேநீர் இடைவேளையின்போது இலங்கை 383 – 8 விக்.; சொனால் தினூஷ 98 ஆ.இ.

August 27, 2026

Recent News

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

சர்வஜன வாக்கெடுப்பு குறித்து நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் | அமைச்சர் சுசில் ரணசிங்க

August 27, 2026
சிறார்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் பாதுகாக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் பேரணியும் மாநாடும் முன்னெடுப்பு

சிறார்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் பாதுகாக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் பேரணியும் மாநாடும் முன்னெடுப்பு

August 27, 2026
செம்மணி புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – பிமல் உறுதி

செம்மணி புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – பிமல் உறுதி

August 27, 2026
தேநீர் இடைவேளையின்போது இலங்கை 383 – 8 விக்.; சொனால் தினூஷ 98 ஆ.இ.

தேநீர் இடைவேளையின்போது இலங்கை 383 – 8 விக்.; சொனால் தினூஷ 98 ஆ.இ.

August 27, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures