எல்லாப்பாதையும்
பாதம் படுவதால்த்தான்
பாதை ஆகிறது
பாதம் படா
பாதையாவும் வாதையாகித் தகிக்கும்
பாதம் நீர் இறைக்கிறது
பாதம் பூக்களை உதிர்க்கிறது
பாதம் பட்டாம் பூச்சிகளை பறக்க விடுகிறது
பாதையெனும் நந்தவனம்
பாதமெனும் உழவனின் கூடாரம்
பாதை அதுவாக இருப்பது
ஒருதியாகமெனில்
அதை அதுவாக இருக்கச் செய்த
பாதம் மகாதியாகத்தின்பேரொளி
இரு கரத்தினால் சத்தம்
சனிப்பதுபோல்
பாதத்துக்கும் பாதைக்குமான
பந்தமே காதலின் தேசிய கீதமென்பேன்
த.செல்வா
காலை 9.25
பேசாலை