Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்துவோம் – மஹிந்த!

July 13, 2020
in News, Politics, World
0

பொதுத் தேர்தலின் பின்னர் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாதுக்க நேற்று பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இந்த நிலத்திற்குள் நுழையும் போதே என்னால் மிகவும் மகிழ்ச்சியை உணர முடிகின்றது.

எங்கள் அரசாங்கம் காணப்பட்ட காலப்பகுதியில் நான் பாடசாலை ஒன்றை திறக்க வந்தவுடன் இந்த நிலத்தை பார்க்க வந்தேன். இங்கு மிகப்பெரிய சதுப்பு நிலமே காணப்பட்டது.

நான் அந்த நேரத்திலேயே அப்போதைய பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பேற்படுத்தி இந்த நிலத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூறினேன்.

அவர் அந்த வேலையை செய்தார். இதனால் இன்று நங்கள் இந்த முறையில் மிகவும் சுத்தமாக, தெளிவான அபிவிருத்தியடைந்த இடத்தில் கூட்டத்தை நடத்துவது குறித்து எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை உணர முடிந்தது.

அன்று நாங்கள் சிறிய கலந்துரையாடலில் ஆரம்பித்த பொதுஜன பெரமுனவின் வருகை இன்று மிகப்பெரிய சக்தியாகியுள்ளது. பிரதேச சபை தேர்தலில் நான்காயிரம் பிரதிநிதிகளை நியமிக்க முடிந்தது.

அன்று 71 சதவீத வாக்குகளை பெற்று தேர்தலில் வெற்றி பெற்றோம். வடக்கு – கிழக்கை தவிர்த்து ஏனைய பிரதேசங்களில் நாங்கள் மிகவும் தெளிவான விசேட வெற்றியை பெற்றோம் என்று கூறினால் சரியாக இருக்கும்.

கடந்த அரசாங்கம் இரண்டு வருடங்களாக மாகாண சபை தேர்தலை பிற்போட்டது. மாகாண சபை தேர்தலை பிற்போட்டுவிட்டு முடிந்த விடயங்களை செய்தார்கள்.

நாட்டில் நல்ல நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்த நேரிட்டது. நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் பாரிய வெற்றியை பெற்றோம். இந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று அரசியலமைப்பில் மாற்றம் மேற்கொண்டு பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்தி மக்களின் ஜனநாயக உரிமையை காப்பாற்ற நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

கடந்த 5 வருட ஆட்சியில் எதிர்க்கட்சி என்ற ரீதியில் முடிந்த விடயங்களை செய்தோம். எனினும் கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் இருந்த மோதல் காரணமாக மக்களுக்கு எந்த ஒரு விடயமும் கிடைக்கவில்லை.

தற்போது என்றாலும் ஐக்கிய தேசிய கட்சியில் பிளவுப்பட்டவர்கள் அரசாங்கம் ஒன்றை அமைக்க வாக்கு கேட்கவில்லை. வரலாற்றில் முதல் முறையாக எதிர்க்கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க வாக்கு கேட்காத முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

அவர்கள் சிறிகொத்தவை கைப்பற்றவே வாக்கு கேட்கின்றார்கள். அது நீதிமன்றத்திற்கு சென்றாவது தீர்த்துக் கொள்ள முடியும். நாட்டை அமைக்க எங்களுடன் இணையுமாறு நான் எங்கள் இளைஞர் யுவதிகளிடம் கேட்டுக் கொள்கின்றேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

பிளாஸ்ரிக் பாவனை பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் பின்னடைவு ; க. மகேசன்

Next Post

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; பொலிஸ் பரிசோதகர் அபுபக்கர் கைது

Next Post

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; பொலிஸ் பரிசோதகர் அபுபக்கர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures