Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான திகதி

July 7, 2020
in News, Politics, World
0

அனைத்து பல்கலைக்கழகங்களினதும் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான திகதியை தீர்மானிக்கும் பொறுப்பு பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் கருத்துத் தெரிவித்தார்.

அதற்கேற்ப, 11 நிபந்தனைகளுடன் இன்று முதல் பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும்

1. ஒரு பீடத்தில் ஒரே தடவையில் இரண்டு வருட மாணவர்களை மாத்திரம் அழைத்தல்.

இறுதி வருட மற்றும் மூன்றாம் வருட மாணவர்களை ஒரே தடவையில் அழைப்பது பொருத்தமாகும்.

2. விடுதியில் தங்கியிருப்பவர்களுக்கு ஒரு மாணவருக்கு ஒரு அறை என்ற விகிதத்தில் வழங்குதல் கட்டாயமானது.

3. பலக்லைக்கழக மீள் ஆரம்பத்தின் போது, விரிவுரை மற்றும் பிரயோகங்கள் தொடர்பான வகுப்புகள் முடிக்கப்பட்டு நேரடியாக பரீட்சைக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

4. பரீட்சைக்கு முன்னரான எந்த கல்வி நடடிவக்கைகளும் நான்கு வாரங்களுக்கு மேற்படக் கூடாது.

5. இறுதி வருட மருத்துவ பீட மாணவர்களுக்கு பயிற்சியை ஆரம்பிக்க முடியும். அதற்கான அனுமதியை குறித்த பீடங்கள் மேற்கொள்ளும்.

6. பல் வைத்தியம் மற்றும் ஆயுள்வேத மருத்துவம் ஆகியவற்றின் இறுதி வருட மாணவர்களின் பயிற்சியை ஆரம்பிக்க முடியும்.

7. கற்றல் நடவடிக்கைகள் முடிந்த கையோடு மாணவர்கள் வீடுகளுக்கு மீளச் செல்ல வேண்டும்.

8. பல்கலைக்கழக வளாகம், மாலை 7 மணிக்குப் பின்னர் எந்தக் காரணத்திற்காகவும் திறக்கப்படமாட்டாது.

9. விளையாட்டு, சமூக வேலைகள், மற்றும் ஏதேனும் ஒன்று சேரல் முதலானவற்றுக்கு அனுமதியில்லை.

10. பலக்லைக்கழகத்தை நடாத்திச் செல்லுவதற்கு தேவையான கல்வி சார், கல்வி சாரா ஊழியர்களின் பங்கேற்பை பெற்றுக் கொள்வது உபவேந்தர்களின் தீர்மானமாகும்.

எனினும், பல்கலைக்கழகங்களின் முதலாம் வருட மாணவர்களின் கற்றல் நடடிவக்கைகளை ஆரம்பிப்பதற்கான தீர்மானம் இன்னமும் எட்டப்படவில்லை என பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

Previous Post

14 வயது சிறுமி எரியூட்டப்பட்டு படுகொலை

Next Post

பாடசாலை மாணவர்களின் வெளிபுற செயற்பாடுகளுக்கு முழுமையாக தடை

Next Post

பாடசாலை மாணவர்களின் வெளிபுற செயற்பாடுகளுக்கு முழுமையாக தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures