Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பறிமுதலாகும் ஜெயலலிதாவின் சொத்துகள்: வெளியானது பட்டியல்

March 4, 2017
in News
0
பறிமுதலாகும் ஜெயலலிதாவின் சொத்துகள்: வெளியானது பட்டியல்

பறிமுதலாகும் ஜெயலலிதாவின் சொத்துகள்: வெளியானது பட்டியல்

சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலைதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத் தொகைக்காக அவரது சொத்துகளை பறிமுதல் செய்யப்படும் என நீதிமன்ற சிறப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மறைந்து, 6ந் தேதி நல்லடக்கம் செய்யப்படுகிறார். அதன்பிறகு, செப்டம்பர் 14-ந் தேதியன்று உச்சநீதிமன்றம், சொத்து குவிப்பு வழக்கில் கீழ் கோர்ட் விதித்த தண்டனையை உறுதி செய்தது.

அதில் ஜெயலலிதா மறைந்துவிடாலும் 100 கோடி அபராத தொகையை கட்ட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. தற்போது அந்த நூறு கோடியை யார் கட்டுவார்கள், எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் தொடக்கம் முதலே சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய பிச்சைமுத்து குறித்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

அதில், ஜெயலலிதா 1991 லிருந்து 1996 ஆண் ஆண்டு வரை அவர் வாங்கிய அல்லது ஆக்கிரமித்த சொத்துக்கள் ஏலம் விடப்படும் வாய்ப்புகள் உள்ளன என்றார்.

போயஸ்கார்டன் வீட்டின் இரண்டு தளங்களின் மீதும் நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என குறிப்பிட்ட அவர்,

ஆனால் 1991க்குப் பிறகு கூடுதலாகக் கட்டப்பட்ட 31 ஏ என்ற எண்கொண்ட கட்டடத்தை பறிமுதல் செய்யலாம் என்றார். சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையின்போது கைப்பற்றப்பட்ட தங்க நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், வாகனங்கள் ஆகியவற்றை ஏலம் விட்டு அபராதத் தொகையை வசூலிக்கலாம்.

மேலும் ஜெயலலிதா 1991-96 வரை முதல்வராக இருந்த போது, தஞ்சை, நெல்லை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் வாங்கப்பட்ட நிலங்களை ஏலத்தில் விட்டு வசூலிக்கலாம்.

மட்டுமின்றி ஐதராபாத்தில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான திராட்சை தோட்டம் உள்ளது. ஆனால், அந்த சொத்து 1991ஆம் ஆண்டுக்கு முன்பே வாங்கப்பட்டுள்ளது. அதனால் அந்த திராட்சை தோட்டத்தை ஏலம் விட இயலாது என்றார். மட்டுமின்றி செகந்திராபாத்தில் ஜெயலலிதாவுக்கு இருக்கும் வீட்டையும் ஏலம் விட இயலாது.

ஜெயலலிதாவின் சொத்துக்கள் எங்கெங்கு உள்ளது என்று ஆராய்ந்து அவற்றை ஏலத்தில் விட்டு அபாரத தொகையை கர்நாடக அரசு வசூலிக்க வேண்டும். இதற்கென்று தனியாக ஒரு குழு அமைக்க வேண்டும். அது கர்நாடக அரசின் பொறுப்பு என்றார் பிச்சைமுத்து.

Tags: Featured
Previous Post

எடப்பாடி அரசை காப்பாற்றிய 500 கிலோ தங்கம்: வெளியான பகீர் தகவல்

Next Post

சசிகலா நியமனம் செல்லாது! தினகரனை ஏற்க முடியாது: தேர்தல் ஆணையம் அதிரடி நோட்டீஸ்

Next Post
சசிகலா நியமனம் செல்லாது! தினகரனை ஏற்க முடியாது: தேர்தல் ஆணையம் அதிரடி நோட்டீஸ்

சசிகலா நியமனம் செல்லாது! தினகரனை ஏற்க முடியாது: தேர்தல் ஆணையம் அதிரடி நோட்டீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures