இன்று சனிக்கிழமை மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் 18 ஆவது வார ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பரிசில் மோதல்கள் வெடித்துள்ளது.
காலை 10:30 மணிக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி, சோம்ப்ஸ்-எலிசே மற்றும் Arc de Triomphe பகுதியில் பெரும் கலவரம் ஏற்பட்டு மஞ்சள் மேலங்கி போராளிகளுக்கும் CRS அதிகாரிகளுக்கும் மோதல் வெடித்துள்ளது. இதில் சில அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும், அதிகாரிகள் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பாய்ச்சி ககலவரத்தை அடக்கியதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
சோம்ப்ஸ்-எலிசேயில் கடைகளை உடைத்த மஞ்சள் மேலங்கி போராளிகள் அங்கிருக்கும் பொருட்களை கொள்ளையிட்டதாகவும் அறியமுடிகிறது. கடந்த சில வாரங்களுக்கு பின்னர் இது போன்ற வன்முறை வெறியாட்டம் மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் போது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.