பனி பொழிவினால் ரொறொன்ரோ பெரும்பாக வீதி நிலைமைகள்.

பனி பொழிவினால் ரொறொன்ரோ பெரும்பாக வீதி நிலைமைகள்.

 gtagta1

ஒன்ராறியோ மாகாண பொலிசார், பனி தொடர்ந்து பெய்வதால் வாகனசாரதிகளை மெதுவாக செல்லுமாறு ஞாபகப்படுத்து கின்றனர்.
தொடர்ந்து பெய்யும் பனியினால் ரொறொன்ரோ பெரும்பாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதகளில் பனி போர்வை காணப்படுகின்றன.
ஒன்ராறியோவின் தென் பகுதியின் பெரும்பாகங்களிற்கு -ஹால்ரன், பீல், ரொறொன்ரோ மற்றும் யோர்க்-டர்ஹாம் பிரதேசங்கள் உட்பட விசேட காலநிலை அறிக்கையை கனடா சுற்று சுழல் விடுத்துள்ளது.
திங்கள்கிழமை மாலை அளவில் இப்பகுதிகளில் மேலதிகமாக 2 முதல் 5சென்ரி மீற்றர்கள் வரையிலான பனிபொழிவு ஏற்படும்.
குறைவான பார்வை நிலை மற்றும் பனிக்கட்டி சாலைகள் காரணமாக சாரதிகள் அவதானமாகவும் ஆயத்தமாகவும் இருக்குமாறு பொலிசார் அறிவுறுத்துகின்றனர்.
சரிவு பாதைகள் மிகவும் வழுக்கல் தன்மையாக காணப்படுகின்றன. வழுக்கல் தன்மை காரணமாக வாகனங்கள் இழுக்கப்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கள் ஏற்படலாம்.
விமான போக்குவரத்துகள் தாமதமாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *