Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பதவியில் இருந்து மகிந்த அகற்றப்படுவார்! | வீரசுமன வீரசிங்க

May 1, 2022
in News, Sri Lanka News
0
போராட்டங்களை முன்னெடுக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாட்டிற்கு கிடைக்கும் டொலர்களை வெகுவாக பாதிக்கும் | மகிந்த

பிரதமர் மகிந்த ராஜபக்ச தானாக பதவி விலகாவிட்டால், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கொண்டு வந்து அவரையும் அரசையும் வெளியேற்றுவோம். மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்து அகற்றப்படுவார் என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரத்திற்குள் பிரதமர் தீர்மானமிக்க அரசியல் முடிவொன்றை எடுப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அரசியலில் நிலையானது எதுவுமில்லை. ஒருவரிடமுள்ள அதிகாரங்களை காலத்துக்கு காலம் மாற்றும் பலம் மக்களிடமுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட நாடாளுமன்றத்திலுள்ள 225 பேரும் தற்போதைய நிலைமையில் மக்களின் கோரிக்கைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ஒருவேளை, பிரதமர் தானாக பதவி விலகாவிட்டால், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கொண்டு வந்து அவரையும் அரசையும் வெளியேற்றுவோம். அந்த நிலைமைக்கு தள்ளாது, உரிய அரசியல் முடிவை பிரதமர் எடுப்பார். அதுவும் அடுத்த வாரத்திற்குள் இடம்பெறும் என்றே எதிர்ப்பார்க்கின்றோம்.

அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் எவ்வேளையிலும், அரசாங்கத்தை பதவியிலிருந்து நீக்க முடியும்.

அதற்கான பெரும்பான்மை எங்களிடமுள்ளது. தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரையும் வைத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்ல முடியாது.

எனவே, பிரதமரை பதவி நீக்குவதற்கும் நியமிப்பதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதால் அவர் தன்னுடைய பொறுப்பை நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கின்றோம். இல்லையேல், நம்பிக்கையில்லாப் பிரேரணையின் ஊடாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கோ ஹோம் கோட்டா எனப் போராடும் தரப்பினரிடம் அடுத்து நடக்க வேண்டியது என்ன என்று வினவினால், அதற்கு அவர்களிடம் எவ்வித பதிலும் இல்லை.

எனவே, ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்புவது மாத்திரம் இப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்பதே அரசியல் ரீதியாக சிந்திக்கும் எங்களுடைய நம்பிக்கையாகவுள்ளது.

நாடாளுமன்றத்திலுள்ள 225 பேரும் இணைந்து நெருக்கடிக்கு குறுகியகால தீர்வை வழங்கிவிட்டு, பின்னர் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரம் யாரிடம் இருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள தேர்தலுக்குச் செல்லலாம்.

ஆனால், தற்போது தேர்தலுக்குச் செல்ல முடியாது என்பதால் நாடாளுமன்றத்திலேயே இதற்கான தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும். இது நாடாளுமன்றத்திலுள்ள 225 உறுப்பினர்களின் பொறுப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

சீரற்ற இதயத் துடிப்பை கட்டுப்படுத்தும் நவீன சிகிச்சை

Next Post

இன்று அஜித் பிறந்தநாள் | வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!

Next Post
நீண்ட வரிசையில் காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்

இன்று அஜித் பிறந்தநாள் | வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures